Posts

Showing posts from June, 2015

சாய்ந்த சுவர்கள்

வீட்டில் சாய்ந்த சுவர்கள் இருக்க ஆசை, கொஞ்சமேனும் சாய்ந்திருந்தால் போதும், இருஆயிரம் ஆண்டு கட்டிட உக்திகள் இன்னுமா சாய்ந்த சுவர்களுக்கு மாறவில்லை. நிமிர்ந்த சுவர்கள் கண்களையும், மனதையும் சோர்ந்து போகச் செய்துவிட்டன. கொஞ்சம் உள்ளாகவோ அல்லது வெளியாகவோ, சன்னல்களும் சாய்ந்திருக்கும். நின்ற இடத்திலிருந்து, உள் சாய்ந்திருந்தால் வானை பார்க்கலாம், வெளி சாய்ந்திருந்தால் மண்ணை பார்க்கலாம், ஒட்டி நிற்காமல், சாய்ந்து நிற்கலாம், சுவர்களின் மீது. கண்ணம் பதித்து, கட்டிலை உணரலாம் சுவர்களின் மீது. படிகளை போல, கால்களை பதிக்கலாம் சுவர்களின் மீது. முக்கோண வீடுகட்டி சிக்கி வாழ ஆசையில்லை, சாய்சதுர வீடுகட்டி சாய்ந்து வாழ ஆசை.

நான் - இந்தியனும் அல்ல

Image
அமெரிக்க பூர்வக்குடி மக்களை இந்த ஹாலிவுட்ல மூவீஸ்ல ‘இந்தியன்ஸ்’ னு சொல்லுறதால, பெருமை பட்டுட்டு இருந்தேன். அவங்க முகத்த பாக்க கொஞ்சம் நம்ம ஆளுங்க மாதிரி தான் இருப்பாங்க. ஒரு டவுட் வரவே, கூகுல் பன்னி பாத்தப்புறம் தான் விவரம் நியாபகம் வந்துச்சு. இந்த கொலம்பஸ், இந்தியாவ கண்டு பிடிக்குறேன்னு அமெரிக்காவுக்கு போயி அங்க வாழ்ந்தவங்கள இந்தியர்கள்-னு நினச்சது தான் இந்த வரலாற்று பிழைக்கு காரணம். இது மட்டும் இல்லாம போற வழில இருந்த தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மு ழுக்க இந்தியாஸ் இல்லனா இந்தீஸ்-னு நோட் பன்னி வச்சாராம், இது தான் ‘இந்திய பெருங்கடல்’, ‘மேற்கு இந்திய தீவுகள்’க்கும் பெயர் காரணம். முன்னமே சொன்ன மாதிரி பூர்வகுடி அமெரிக்க மனிதர்களின் முகம் நம்ம ஆளுங்க மாதிரி இருக்றதால இந்தியன்ஸ்-னு ஏன்டா நினச்சோம்னு கொஞ்சம் காஷ்மிர்ல ஆரம்பிச்சு அஸ்ஸாம் வந்து ஒடிஸா வழியா தமிழ்நாடு வந்து அப்டியே மஹாரஷ்ட்ரா போயி ராஜஸ்தான் போனா இந்தியன்ஸ்-னு நான் கற்பனைல வச்சிருந்த முகமெல்லாம் கரைஞ்சு போச்சு. நமக்கு தனியா ஒரு முகம்னு ஏதும் கிடையாது, இன்னும் சொல்லப்போனா மனுசங்களுக்கே தனியா முகம் ஏதும் இல்ல ஒவ்வொருவருக்கும்...

யோகா – சேற்றில் முளைத்தது

Image
                           பொதுவா இங்க எல்லாருக்குமே ‘யோகா’ மேல ஒரு மதிப்பு இருக்கு. ஆனா அது ஒரு மதம் சார்ந்த தனி மனித உடல், உள்ள அடிப்படையிளான சித்தாந்த பழக்க முறை என்றாலும் கூட, மதம் சார்ந்த/சாராத பல மனிதர்கள் பின்பற்றித்தான் வருகிறார்கள். இப்போ நாரதர் மோடியும் அவரு கவர்ன்மென்ட்-ம் இத வச்சு பன்னுற கலகங்களை வெளிக்கொனறவே இந்த பதிவு. பொதுவில் பல மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/காவி சாராத தத்துவாந்தங்கள் மீதும், மனிதர்கள் மீதும் காவி பூசுவதையும், காவி சார்ந்த விசயங்களை, இவை மனித  குளத்திற்கு இன்றியமையாதது, மதம் சாராதது என்று திணிப்பதுமே இவர்களின் சீக்கு வந்த மூளை. திருவள்ளுவரையும், புத்தரையும் ஏன், அம்பேத்கர் மேலையுமே காவி சானி அடிக்க முயற்சி செய்தவர்கள் இவர்கள், இப்போது யோகாவின் மீது கும்புடு போட்டு ஒரு நாள் கூத்து பன்ன போகிறார்கள். தினமும் யோகா ப்ராக்டிஸ் பன்னுற மற்றும் சொல்லித்தர மதம் சாராத பல வெகுசன மக்கள் இருக்குறப்போ, யோகா வியாபாரம் பன்னி காசு பார்க்கிறவர்கள் யார் “ஸ்ரீ ஸ்ரீ, சத்குரு, யோகா கு...
Image
B. R. Ambedkar  |  பீமாராவ் அம்பேத்கர் Graphite pencils on papers Pencils        Koh-i-noor(6B, 8B) Paper          Bilt Matrix (130gsm A3) Duration       4 hours
Image
Faces  |  முகங்கள் Graphite pencils on papers Pencils        Steadtler (2B, 4B, 6B) Koh-i-noor (6B, 8B) Paper          Bilt Matrix (130gsm A3) Duration       25+ hours Based on a Photograph by Prabhu Kalidas

தியோ – வான் கா

Image
தம்பிக்காக ஓடா ஒழைச்சு தேஞ்சி போன அண்ணன்’களை ஹிரோவா காட்டிகிட்டு இருக்கு நம்ம தமிழ் சினிமா இன்னமும், இங்க அண்ணனுக்காக எல்லாமும் செஞ்சு ஒரு நண்பனா இருந்த தம்பிய பத்தின பதிவு இது. ஆனா தம்பியா, அண்ணனா ன்றது இங்க விசயம் இல்ல, இரண்டு பேருக்கும் இடைல இருந்த அன்பு தான் விசயம். “There is nothing more truly artistic than to love people.” - Vincent Willem Van Gogh. இன்னைக்கு, இத ‘வான் கா’ சொன்னதா கூகுல் சொல்லுச்சு, அவர் இத சொன்னாரா இல்லையானு தெரியாது, ஒரு வேலை சொல்லியிருந்தா என்ன மன நிலைல இத சொல்லியிருப்பார். வான் கா – தன் வாழ் நாள்’ல 2000+ பெயிண்டிங்ஸ் வரைஞ்சு, ஒன்னத்தையும் விக்கத்தெறியாத மிகச்சிறந்த ஓவியர். இன்னைக்கு இவரது ஓவியங்களுக்கு விலை பல கோடிகள். அவர் வாழ்ந்த சமூகம் அவரை புறக்கனித்தது’னு சொல்லுவாங்க. முதல்ல அவரை புறக்கனித்தது அவரின் காதல்’கள், பின்னால் அவர் தான் சமூகத்தை விடுத்து தனிமையை எடுத்தார். வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று காதல் இருந்தது அவருக்கு. மூன்றும் தோல்வி. அந்த நிராகரிப்பு தான் அவரை தனிமையில் சிக்க வைத்தது, வயல்களையும், வீதிகளையும், தனது அறையையும...