நாற்பதுகளில் சாகும் ஓர் ஆண் சமூகம்
நாற்பது வயதில் இறந்து போன பல ஆளுமைகளை நாம் கடந்து வந்திருப்போம். சமூகத்துக்கும் ஏதேனும் செய்துவிட்டு செத்தவர்கள் அவர்கள். சே, மீசைகவி, மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், இப்படி பட்டியலை நீட்டலாம். ஆனால் இவர்கள் இறந்துவிட்டவர்கள், இன்று ஆளுமைகளே காணக்கிடைத்தல் அரிது என்பதால் நாற்பதுகளின் ஆளுமைகளின் மரணம் நாம் அவ்வளவாக சந்திக்காத ஒன்று, சந்திக்க விரும்பாத ஒன்று. மாறாக கிராமங்களில் ஒரு சமூகம் நாற்பதுகளில் ஆண்களை இழந்துகொண்டு இருக்கிறது, பற ை இசை காதலர்கள், பறையை தன் மூச்சாக என்னி சாகுறவரைக்கும் பறைகொட்ட ஆசை கொண்டவர்கள் தன் சாவை விரைவில் எடுத்துகொள்கின்றனர். பறையையும், பறையர்களையும் தீட்டா பார்க்கின்ற சமூகம் நம்மளுடையது, பூர்வகுடிகளை, புதுகுடிகள் ஏறி மிதிப்பது, புதிதல்லவே!. “பறைனா என்னா தெறியுமா!, சும்மா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் அதிரும், அடிவயிறே கலங்கும்”னு பேசுற பலரும் பறையை கத்துக்க முயலுவதில்லை, ஆனா ஆசைனு மட்டும் சொல்லுவோம். கத்துகனும்ன்றது சட்டம் இல்லனாலும் கொஞ்சம் வாசிக்கிறவங்கள மறியாதையா பாக்கலாம். வாழ வாய்ப்பளிக்கலாம் அது போதும. பறை வாசிப்பவர்களின்...