பென்சிலில் கிறுக்காமல் யாராவது பள்ளி பருவத்தை கட ந்து வந்திருப்போமா ? நிச்சயமாக இல்லை. மாங்கா , காக்கா , யானை இப்படி எதையாவது கோடுகளால் வரைவதாய் எண்ணி கிறுக்கி இருப்போம் , இன்று நுன்னிய கிறுக்கல்களால் வரைவது தான் “ உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் ” (Hyper-Realistic Pencil Drawings). அது என்ன உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் ? இதை பத்தின புரிதல் , இதை கலையாக , பொழுதாக்கமாக , தொழிலாக எடுத்து கொண்டவர்களுக்கு எப்படி தெறியவந்தது ? எல்லாம் ஒரு தேடலில் தான் துவங்கியது. பொதுவாக சிலர் சொல்லுவதுண்டு , “ ஸ்கூல் படிக்கிறப்போ வரைஞ்சது , அப்புறம் டச்சு விட்டுப்போச்சு ” , அங்கேதான் நாம் வரைதலை தொலைக்கிறோம். மீண்டும் எப்படி தொலைத்த அந்த வரைதலுடனான அந்த டச் ’ சை மீட்டெடுப்பது , அதற்குதான் இருக்கிறது கூகுல். கூகுலிடம் , “ Pencil Drawings ” என்று தேடினால் போதும் , அனைத்து தகவல்களையும் கொடுக்கும் , அது பத்தவில்லை என்றால் அதுற்குதானே இருக்கிறது ஃபேஸ்புக்கும் , மேற்குறிப்பிட்ட அதே வார்த்...
Comments
Post a Comment