ஆதார் அட்ராசிட்டி



இன்னும் ரெண்டு நாள்ல, ஒரு கம்பெனில ட்ரெய்னீயா ஜாய்ன் பன்ன போறேன், ஒரு பத்து நாள்க்கு முன்னால கம்பனில இருந்து ஒரு மெஸ்ஸேஜ் ஃபோனுக்கு, ஆதார் கார்டையும் Reporting date அப்போ கொண்டு வாங்க, அப்படி ஆதார் கார்டு இல்லைனா தயவு செஞ்சு வேற ஒரு Reporting Dateக்கு Request பன்னுங்கனு சொல்லி சொன்னாங்க, ‘இலவு காத்த கிளி’ மாதிறி காத்திருந்து இப்போ தான் ஒரு வழியா Reporting date கிடைச்சது, ஆதார் இல்லைனா அதுவும் காலி.


இதே போல ஒரு வாரம் முன்னால பாஸ்போர்ட் அப்ளை பன்ன போனேன், அங்கையும் அதே கதை தான், கையில இருக்குற எல்லா Documentsம் கேக்க போறானுங்க, Address வேற எல்லா documents லயும் ஒவ்வொரு டைப்பா இருக்கு, கண்டிப்பா அலைய விடப்போறாங்கனு நினைச்சேன், ஆனா அங்க, எனக்கான பெயருக்கும் Addressக்கும் அவங்க கேட்ட ஒரே Document ஆதார் மட்டும் தான். ரொம்போ ஈசியாவே பாஸ்போர்ட் அப்ளிகேஷன் Granted ஆச்சு, அங்கயும் ஆதார் இல்லைனா கதை கந்தர்.

போன காங்ரஸ் பீரியட்ல இந்த ஆதார் கார்டு எடுக்க போறாங்கனு சொன்னப்போ, பேப்பர்ல அத பத்தி நிறைய ஆர்டிகள்ஸ் படிச்சு, “இந்த கைரேகை எடுக்குறது, கருவிழி பதிவு பன்னுறதெல்லாம் தப்பு, கவர்ன்மென்ட் கிரிமினல்ஸ்க்கு மட்டும் தான் இதயெல்லாம் எடுக்கும், நாட்டுல எல்லா குடிமகனோட அடையாளத்தையும் இப்படி எடுக்குறது ஜனநாயக விரோதம்னு நினைச்சுட்ருந்தேன்” நினைச்சது மட்டும் இல்ல, ஆதார்க்கு போட்டோ எடுக்க போறப்போ “நான் வரலம்மா!, எனக்கு ஆதார் கார்டு வேணாம்”னு சொன்னேன், எங்க அம்மா ஒரே போடா போட்டு, “ஒழுங்கா வா, ஃபோட்டோ எடுக்க போகலாம் ஊரே போயி எடுக்குறாங்க, நீ மட்டும் வரலனா என்ன அர்த்தம், லூசு மாதிரி பேசாத”னு கூட்டிட்டு போணாங்க.

ஆதார் வந்த அப்புறம் கேஸுக்கு, பேங்க்குக்கு, எல்லாத்துலயும் கியூல நின்னு ஆதார் நம்பர இனைச்சாச்சு, என்ன கியூல நிக்கிறப்போ மட்டும் தான் காண்டாச்சு. சோ மக்கழே ஊரோட ஒத்து வாழுறது சில இடங்கள்ல ஓகே தான், இல்லைனா பொழப்பு போயிருக்கும், பத்தோட பதினொன்னா ஆதார் இருக்கும்னு நினைச்சேன், ஆனா நாளைக்கு ஆதார் மட்டும் இருந்தா போதும்ன்ற நிலைமை வந்துடும் போல, ஆகவே மக்கழே, ஆதார் இன்னும் எடுக்காதவங்க சீக்கிரம் எடுத்துடுங்க.

Comments

Popular posts from this blog

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-மூன்றாம் நாளில் ஒரு ராமன் ராகவ்

பென்சிலோடு ஒரு பயணம்

எண்ணச்சிதைவு