ரணம் சுகம்


எவர்மேலும் நம்பிக்கையின்றி, எல்லோரையும் சந்தேகக்கண்களோடு பார்க்கும் சிலரை காணமுடிகிறது, யாரோ ஒருசிலரால் காயம்பட்டிருக்கலாம் அதற்காக சொந்தம், நட்பு, அனுதினம் பார்க்கும் மனிதர்கள் என எல்லோரிடத்திலும் வெறுப்பை உமிழ்கின்றனர் அல்லது விலகியே இருக்கின்றனர், இப்படியே இருக்க வேண்டுமா என்ன!. 


எல்லோரையும் நேசிக்கலாம், ஒரே தருணத்தில் எல்லோரும் நம் எதிர்பார்ப்புகளை குத்திக்கிழித்துவிடப்போவதில்லை. எல்லோரிடத்திலும் நேசம் கொள்கையில் ஒருவர் குத்திக்கிழித்தால் அவ்வளவாக வலிக்கப்போவதுமில்லை. மாறாக ஒரே இடத்தில் நாம் அன்பை குவித்துவைக்கையில் சரிந்து விழத்தான் செய்யும் பின் அந்த வலிக்கு மருந்துகள் கிடைக்கவே கிடைக்காது.

எல்லோரையும் நம்புதல் எவ்வளவு அபத்தமோ, அதைவிட அபத்தமும் ஆபத்தும் நிறைந்தது எவரையும் நம்பாமல் தனித்து இருத்தல். எல்லோரையும் நேசிப்போம், குத்திக்கிழிப்பவர்கள் கிழிக்கட்டும், அந்த வாய்ப்பை எல்லோருக்கும் கொடுப்போம், அப்போதுதான் அதற்கு மருந்தும் கிடைக்கும். 

ரணம் சுகம் 
heart emoticon

Comments

Popular posts from this blog

15வது சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்-மூன்றாம் நாளில் ஒரு ராமன் ராகவ்

பென்சிலோடு ஒரு பயணம்

எண்ணச்சிதைவு