Posts

என் நல்லூர்கள்

எனக்கு நல்லூர்கள் ரெண்டு உண்டு. ஒன்னு சிங்காநல்லூர், இன்னொன்னு சோழிங்கநல்லூர். நாலு வருஷம் முன்னால கோவைல காலேஜ் ஜாயின் பண்ணினதுக்கப்புறம், திருச்சியிலருந்து கிளம்புனா அடுத்து கோயம்புத்தூர்ல கால் வைக்குற இடம் சிங்காநல்லூர்தான், பிறகு அங்க இருந்து பஸ் புடிச்சாதான் காலேஜ். அப்புறம் வீக்கெண்டுல கொறஞ்ச காசுல, செம்ம திருப்தியா சாப்புட போற இடமான 'சாந்தி கியர்ஸ் கேண்டீன்' இருக்றதும் சிங்காநல்லூர்தான். ஆக அப்போவெல்லாம் பஸ்ஸுல ஏறி வாயத்தொறந்தா மொதல்ல வர்ற பேரு சிங்காநல்லூராதான் இருந்தது. அதுபோலவே இங்க சென்னை வந்தப்புறம் ட்ரெயினிங்க்கு ஜாயின் பண்ணின இடம் சோழிங்கநல்லூர். சோ இங்க வந்தப்புறம் முதல் ஒரு மாசம் டெய்லி ஆஃபிஸ் போக பஸ் ஏறி 'சிங்காநல்லூர் டிக்கெட் ஒன்னு கொடுங்க'ன்னு பல முறை கேட்டு பிறகு திருத்திக்கேட்டது உண்டு. பலமுறை சிங்காநல்லூர்க்கே டிக்கெட் கேட்டிருந்தாலும் சோழிங்கநல்லூர்க்கு சரியா டிக்கெட் வந்துடும் ;) காரணம் ரெண்டும் நல்லூர்தானே! :) இப்போ வேறமாதிரியான நிலைமை, போன வெள்ளிக்கிழமை நண்பன் ஒருத்தன் ஃபோண் போட்டு கோயம்புத்தூர்ல ஒரு இடத்துக்கு போக வழி கேக்க, சிங்காநல்லூர...

Flatland by Aydın büyüktaş

Image
Surreal Photography'யாம். இந்த Inception, Elysium, Upside down படத்துங்கள்ல வர்ற சில சீன்ஸ எல்லாம் நியாபகப்படுத்திருச்சு, லவ்லி.  <3 informed by the satirical novel by edwin abbott titled ‘flatland: a romance of many dimensions’ — the story of a two-dimensional world occupied by geometric figures — turkish artist aydın büyüktaş sets his series ‘flatland’ in a surprising context that defies the laws of physical existence. இது இஸ்தான்புல், ஏற்கனவே இஸ்தான்புல்ல பத்தி கேள்வி பட்டிருக்றதாலயும், " Istanbul | Flow Through the City of Tales " அப்டின்ற இஸ்தான்புல் ஏர்லைன்சோட விளம்பர வீடியோ ஒன்னு பார்த்ததாலயும், ஃபாரிசுக்கப்புறம் காதல்வயப்பட்டிருக்றது இஸ்தான்புல்கிட்டதான். இப்போ அதுக்கு தீனி போட்டிருக்கு இந்த ஃபோடோக்ராஃபி சீரீஸ்.   :)

சனியாகும் வெள்ளி

இந்த வெள்ளிக்கிழமை இருக்கே, சனியன்!!. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நைட்டே ட்ரெஸ்சயெல்லாம் ஊரவச்சு, துவச்சி போட்டுட்டா சனி, ஞாயிறு ரெண்டுநாளும் நிம்மதியா நெனச்சத பண்ணலாம்னு யோசிச்சு ட்ரெஸ்ச ஊர வைக்கிறது உண்டு. ஆனா அன்னைக்கு மட்டும் நியாபகமறதி உச்சத்துக்கு போயிடும். அதும் எப்டினா சனிக்கிழமை நைட்டுதான் ட்ரெஸ்ச ஊர வச்சதே நியாபகத்துக்கு வரும். அட அப்போவாவது துவைச்சி முடிச்சு ஞாயித்துக்கிழமையாவது நிம்மதியா இருக்கலாம்னு நெனைச்சா... அங்கதான் இன்னும் அடி விழும், பின்ன 24 மணிநேரம் நல்ல ா தண்ணில ஊரிப்போன ட்ரெஸ்ச துவைச்சு காயவச்சு எடுத்தா மணக்கவா செய்யும். அழுக்கா இருக்றப்போ வர்ற ஸ்மெல்லவிட பலமடங்கு அதிகமா நமத்துப்போன ஸ்மெல் வரும். அப்புறம் வேற என்ன, மருக்கா ஒரு டைம் ஞாயுத்துக்கிழமையும் கவனமா அலசி போடனும், அப்பவும் அந்த ஸ்மெல் முழுசா போக ரெண்டு தடவைக்குமேல துவைக்கனும். படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்ததவிட, இப்போ அந்த மறதி குறஞ்சிடுச்சி. ஆனாலுமே சென்னை வந்தப்புறம் ஒரு மூனுமுறை இப்டி மறந்து, அந்த வீக்கென்டல நல்லா வாங்கிகட்டிகிட்டாச்சு. இன்னைக்கு இந்த வெள்ளி, சனியனாக மாறாதுன்ற நம்பிக்கைல ட்ரெ...

கூந்தல் மாதிரி

பொதுவா பொண்ணுக்கும் பையனுக்கும் ஒத்துப்போகுதோ இல்லையோ, பொண்ணுக்கும் பொண்ணுக்கும் ஒத்துபோகுறதே இல்ல. எனக்கு தெரிஞ்ச அக்கா ஒருத்தங்க திருச்சில காலெஜ் ஜாயின் பண்ணினஅப்போ அவங்க ஹாஸ்டல் சீனியர்ஸ் அவங்க கைல ஒரு குண்டூசிய கொடுத்து அதால அவங்க இருந்த ரூம அளந்து எத்தனை குண்டூசி வரும்னு சொல்ல சொன்னாங்களாம், இவங்களும் எதோ விஜயகாந்த் மாதிரி தோராயமா மனக்கணக்கு போட்டு ஒரு நம்பர சொல்லி தப்பிச்சிடலாம்னு ஒரு நம்பர சொல்லியிருக்காங்க. அங்கதான் ட்விஸ்டு, அந்த சீனியர் ஆல்ரெடி அவங்க ஜாயின் பண்ணினப் போ இதேமாதிரி அவங்க சீனியர்கிட்ட மாட்டி அப்புறம் கடைசியா அளந்து சொன்னப்புறம்தான் விட்டிருக்காங்க, சோ அவங்களுக்கு சரியான நம்பர் தெரியும். இந்த அக்கா தப்பான நம்பர் சொன்ன அப்புறம் என்னையவே நீ எமாத்துரியான்னு சொல்லி கடைசியா அந்த குண்டூசியால ரூம அளக்க வச்சு, அளந்தஅப்புறமும் நம்பர் தப்புன்னு சொல்லி அழவச்சு, நோகடிச்சு அப்புறமாதான் விட்டிருக்காங்க. இந்தமாதிரி எல்லா பக்கமும் நடக்கறது இல்லன்னாலும், அங்க அங்க நடந்துகிட்டுதான் இருக்கு. பையனுங்கதான் மயிரு மாதிரி பிஹேவ் பன்னுறானுன்கன்னா, சில பொண்ணுங்களும் கூந்தல் மாதிரி...

எ.டி.எம் திருவிளையாடல்

எ.டி.எம்'ல பணம் எடுக்குறப்போ 400, 900, 1900 இப்படி எடுத்துதான் எனக்கு பழக்கம். ஏன்னா 500, 1000, 2000 இப்படி எடுத்தா நூரு ரூபாய் நோட்டு வர்றதே இல்ல, நிறைய எ.டி.எம்'ல டினாமினேசன் மிக்ஸ் ஆகி வந்தாலும், எனக்குன்னு எடுக்க போனா மட்டும் வரவே வராது, டிசைன் அப்புடி. அதனாலதான் எப்பவுமே ஒரு நூரு ரூபா நோட்டாவது வர்றமாறி டினாமிநேசன்ல எடுப்பேன். பொதுவா பணம் எடுக்குறப்போ பல எ.டி.எம்'ல "டு யூ வாண்ட் ரெசிப்ட்" அப்படின்னு கேக்கும், அதுக்கு கீழ "எஸ்" & "நோ" இந்த ரெண்டு பட்டனும் இருக்கும், என்னோ ட பேங்க் எ.டி.எம்'ல கூடவெ ஒரு வசனமும் இருக்கும் அதாவது "ப்ரெஸ் நோ டு சேவ் ட்ரீஸ்" அதாவது ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதால நெறைய மரம் அழியுதாம், சரி அதுதான் பணம் எடுத்த உடனேயே பேலன்ஸ் எவ்ளோ இருக்குனு டக்குனு ஃபோனுக்கு மெசேஜ் வந்துடுமே அப்புறம் எதுக்கு மரத்த வெட்டனும்னு நா எப்பவும் ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதில்ல. போன டைம் எ.டி.எம் போனப்பவும் இதேபோலத்தான் 900 ரூபா எடுத்தேன், மொத்தமா சேவிங்ஸ்ல இருந்த அமவுண்ட் மூவாயிரத்திசில்லரை ரூவா, 900 எடுத்தது போக 210...

ரவீந்தர்'ஸ் மாம்ஸ் ரெசிப்பி

போனவருஷக்கடைசில வந்த வெள்ளத்துக்கு நிறைய கார்பொரேட் கம்பெனிகள்ல லோன் கொடுக்கப்பட்டது, எங்க கம்பெனிலயும் ஒரு லட்சம் வரைக்கும் வட்டியில்லாத லோன் இருந்தது, இருபது மாசம் நாலாயிரம் நாலாயிறமா கட்டினா சீக்கிரம் அடைச்சிடலாம். கிட்டத்தட்ட எங்க பேட்ச்ல இருந்த பாதி பேர் அந்த லோன எடுத்துகிட்டோம். நம்ம ஊரு பசங்க, பொண்ணுங்களுக்கு அவங்கவங்க தேவைய பொருத்து, education லோன அடைக்க, நகை எடுக்க, ஃபிக்ஸ்டு டெப்பாசிட்ல போட, வேறு சில கடன்கல அடைக்க என இப்படி அந்த பணத்த எடுத்து செலவு பண்ணத்தான் முடிஞ்சது, ஒரு காலத்துலயும் இப்படியான ஒரு லட்சம் பணத்த எடுத்து எதுலயாவது இன்வெஸ்ட் பண்ணவோ, இல்ல சைடுல ஒரு தொழில் தொடங்கவோ நமக்கும் சரி, நம்மள சுத்தியிருக்கிரவங்களுக்கும் சரி தைரியம் வரவே வராது, நாம வளர்க்கப்பட்ட விதம் அப்படி, இதுதான் இங்கு பெரும்பான்மை. இது நம்மள சுத்தி இருக்கிற நிலம, அப்படியே அடுத்த பக்கம் போவோம், நார்த்-இந்தியன்ஸ். அவங்களுக்கும் நமக்கும் இருக்கிற வித்தியாசத்திற்கு ஒரு காரணம் உண்டு, அதாவது காலனி ஆதிக்க காலங்கள்ல வடஇந்திய மக்கள் பல போர்களை சந்திச்சது உண்டு, அவங்க அனுபவிச்ச அளவு போர்களின் நிதர்சன...

க்ளட்ச் பென்சில்

Image
சின்ன வயசுல என்கிட்டே ஒரு பென்சில் இருந்தது, அது பேரு 'Mechanical Clutch pencil', கிட்டத்தட்ட அப்படியே முதல் ஃபோட்டோல இருக்குறமாதிறியேதான் இருக்கும். அது எங்க ஸ்கூல் ப்ரேயர் க்ரவுண்ட்ல பரப்பியிறுந்த மணல்ல கிடச்சதா நியாபகம். ஆனா அத எங்க எப்போ தொலைச்சேன்னு நியாபகம் இல்ல. அது என்கிட்டே இருந்தப்போ அது ஒரு ஏலியன் வஸ்துவா தான் எனக்கு தெரிஞ்சது. மொதோமுறையா பார்த்ததும் பென்சில்தான்னு மட்டும் தெரிஞ்சிடுச்சு. ஆனா அது எதோ எங்கயும் கிடைக்காத பென்சில்னும், முன்னால எப்பவாது யாராவது யூஸ் ப ண் ணிருப்பாங்க, இப்போ எங்கயும் கிடைக்காதுன்னும் நினைச்சு ரொம்போ பத்திரமா வச்சிருந்தேன். அந்த பென்சில்க்கான லெட்டும் தனியா கிடைக்கும்னெல்லாம் அப்போ தெரியாது, பென்சில சீவுறப்போ உடையுற பென்சில் மொக்கத்தான் அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன், அப்புறமா ஒரு நட்ராஜ் பென்சில் வாங்கி காம்பஸ வச்சு ரெண்டா பொளந்து அதுல இருக்குற பென்சில் லெட்ட தனியா எடுத்து அதுல போட்டு யூஸ் பண்ணிகிட்டிருந்தேன். கொஞ்சநாள்ல அதுல உள்ள அந்த ப்ளாஸ்டிக் ஹோல்டர் உடஞ்சிருச்சு, அப்புறமா எதோ ஒரு பேனாவோட ஹோல்டெர்லர்ல ஃபிக்ஸ் பண்ணி யூ...