18 Dec 2016

கலகக்காரன்

2010ல எங்க ஊர் லால்குடில உள்ள பொது நூலகத்துக்கு வாராவாரம் நானும் என் ப்ரெண்ட்ஸ் மூனுபேரும் வெறித்தனமா போகிட்ருந்தப்போ, எஸ்ரா'வ படி சாருவயெல்லாம் படிக்காதன்னு லைப்ரரில யாரோ சொன்னதா நியாபகம். ஏதோ நியூஸ் பேப்பர்ல வந்த ஆர்டிகள்லகூட போட்ருந்தாங்கனு நினைக்கிறேன் சாரு ஒரு க்ரிடிக் ஊரே நல்லா இருக்குனு சொல்ற விசயங்கள கழுவி ஊத்துவாரு அப்டி இப்டினு. ஆனா உண்மையா இப்போவரைக்கும் சாரு, எஸ்ரா ரெண்டு பேரோட எந்த நாவலையும் உருப்படியா படிச்சது இல்ல.

எஸ்ராஓட, ஓவியங்கள் பத்தின ஒரு புக்க முழுசா படிச்சிருக்கேன் ஆனா பேரு நியாபகம் இல்ல, அதேபோல சாருவோட 'சினிமா-அலைந்து திரிபவனின் அழகியல்' புக்கையும் படிச்சிருக்கேன், இளையராஜா மேலயும் கமல் மேலயும் இந்த ஆளுக்கு ஏன் இவ்ளோ காண்டு, ஏன் இப்டி கழுவி ஊத்திருக்காருன்னு நினச்சேன். அப்போ நான் படிச்சு ரசிச்ச புக்குன்னா அது ஆசான் இறையன்பு ஐ.எ.எஸ் எழுதுன 'அவ்வுலகம்' நாவல்தான் :p.

 



அதுக்கப்புறம் சாருவை சுத்தமா படிக்கல, ஆனா சாருவபத்தி நிறைய படிச்சேன் ஆனா அதெல்லாமும் நெகட்டிவ்தான், அவரு வலது காதுல அவரு கடுக்கன் போட்டுருக்கிறதுல ஆரமிச்சு, பர்சனல், சினிமா, அரசியல், ஆன்மீகம், எலக்கிய சண்டைனு அவர்மேல வைக்கப்பட்ட எல்லா க்ரிடிக்ஸையும் படுச்சுட்டேன், இனி அந்த மனுஷனபத்தி படிக்க ஒண்ணுமில்ல. இனியாவது அவரின் எழுத்துக்களை படிக்கணும். சாரு எழுத்துக்களை படிச்சு அவரு கண்ணு வழியா நிச்சயமா இந்த ஒலகத்த ஒருதடவையாவது பாக்கணும்னு தோணினது, இங்க அவர் எழுத்த நம்மாளுங்க கொண்டாடுறத பாத்ததுக்கப்புறம்தான்.

ஹாப்பி பர்த்டே சாரு :), சிக்கிறமே உங்க புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி படிக்கப்போறேன் ;).
ஓவியம், போன வருஷம் இதேநாள்ல வரைஞ்சது!.