31 Dec 2015

Speed drawing video - The Mysterious look



இந்த வருடத்தில் நிறைவு செய்த கடைசி ஓவியம் "The Mysterious Look"ன் Full Process Video'வ Fast Motion செஞ்சு Speed Drawing video'வா பகிர்ந்திருக்கிறேன், கிட்டத்தட்ட மொத்தம் நான்கு மணிநேர வீடியோ, ஸ்பீடு ரன் செய்து 12 நிமிடத்திற்கு மாத்தியிருக்கிறேன், வாய்ப்பிருக்குறவங்க பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க!


First attempt on filming my sketching process

The Mysterious Look – Charcoal Sketch
12.21 mins

29 Dec 2015


The Mysterious Look | பூடகப்பார்வை




Charcoal Pencils on Paper


Faber-Castell Pitt Charcoal Pencils
A3 130gsm Paper

Photograph credits: Unknown

22 Dec 2015

கட்டம் போட்டு வரைபவர்களுக்காக RollingRuler


அரை செண்டிமீட்டர் கணக்கே 35க்கு 45 என, தோராயமா 1500 கட்டங்கள் போட்டு Grid Drawing Methodல வரைய ஆரம்பிச்சோம், இப்போ எப்படியோ 3செண்டிமீட்டர் கட்டங்களிலயே அவுட்லைன் accuracy ஆக வரைய இயல்கிறது ஆக 200 இல்லனா 300 கட்டங்கள் தான் இப்போது, ஆனா இப்போ தான் பெறிய சைஸ்ல வரைய ஆரம்பிச்சிருக்கேன். ஆக கட்டங்களின் எண்ணிக்கையைஎல்லாம் விட்டுடுவோம் பொதுவா பேப்பர்ல கட்டம் போடுறதுன்றது ஒரு தலைவலியான வேலை, எனக்கெல்லாம் அரைமணிநேரமாவது ஆகும் சாதாரணமாககட்டம் போட, அப்போ அப்போ Free Hand'ல் வரைய ஆரம்பித்ததுக்கு இதுவும் ஒரு காரணம். எனினும் Realistic Pencil Sketches'ஸ்க்கு கட்டம் போட்டு வரைந்தால் ஈசியாக டீடெய்ல்ஸை கொடுக்க முடியும் Measurements'ம் கரெக்டாக இருக்கும்.


சோ தலைவலிக்காம ஈசியா பேப்பரில் கட்டம் போட ஏதாவது வழி இருக்குமான்னு நிறைய தேடிக்கொண்டிருந்தேன், நாமளா ஏதாவது செய்யலாம்னும் நிறைய வெட்டிவேலைகளை செய்துகொண்டிருந்தேன், எதுவுமே கை கொடுக்கல, அப்போதான் இந்த "Rolling Ruler" அப்டின்ற ஸ்கேல பத்தி தெரியவந்தது, செம்மையா இருக்கு. ஆர்கிடெக்ட் நண்பர்களுக்கு பிரசித்தமாக இருக்கலாம். சாதாரண ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கல, அமேசான்லயும் சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் விலை அதிகமா இருக்கு, சோ பெரிய ஸ்டேஷனரி கடை இல்லனா ஆர்ட் எம்போரியம் கடைகளில் தேடிப்பாருங்கள், இரண்டு மூன்று சைஸ்களில் வெவ்வேறு பல சிறப்பம்சங்களோடு கிடைக்கிறது போல, ஒரு இன்ஜினியரின் நண்பன் மூலமா பேஸிக்கான ஒரு ஸ்கேல் எனக்கு கிடைச்சிருக்கு. ஈசியாகவும், சீக்கிரமாகவும் கட்டங்கள் வரைய முடியிது, புதுசா இத யூஸ் பண்ணுறவங்க கோடு வரையறப்போ 'என்னடா இது அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிட்டே இருக்கு!’னு நினைக்க வேண்டாம் பழகிடும் smile emoticon

ஜ்யாமெட்ரிக் பேட்டர்ன்கள் வரையவும் இந்த ஸ்கேலை உபயோகபடுத்துகிறார்கள்,

யூடியூபில் டெமோ வீடியோ: 



15 Dec 2015

Smile | புன்னகை






Charcoal Pencils on Paper


Pencil           Faber-Castell Pitt Charcoal
Paper           Brustro (200gsm A4)


Based on a Photograph by Shirren Lim

20 Nov 2015

சைக்கோக்கள் எங்கும் இருக்கிறார்கள்


வட இந்தியர்களுக்கென்று பல மொழிகளிருந்தாலும், இந்தியை தூக்கி பிடித்து, இங்கிருந்து அங்கு செல்லும் ஹிந்தி தெறியாத தென்னிந்தியர்களை, அவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஏன்? பலரும் அங்கு இவ்வாறு சைக்கோக்கள் போல் நடந்துகொள்கிறார்களென்று பல முறை யோசித்தது உண்டு.

சில நாட்களுக்கு முன் பதில் கிடைத்தது, அது யாதெனின், அங்கு மட்டுமல்ல சைக்கோக்கள் இங்கும் இருக்கிறார்கள் என்பதே!. எங்கள் அலுவலகம் இருக்குமிடங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டியவாறே இருக்கின்றனர், அங்கெல்லாம் வேலை செய்வது வட இந்தியர்கள் மட்டுமே, அவர்கள் பேசுவது ஹிந்தியா இல்லை வேறெதும் மொழியா என தெறியவில்லை. சிலர் அவர்கள் வேலை செய்யும் கட்டிடத்திலேயே தங்கியும், சிலர் வேறெங்கிருந்தோ தினமும் பஸ்சில் வந்தும் வேலை செய்கின்றனர்.

தினமும் பஸ்ஸில் வரும்போதும், போகும்போதும் அவர்கள் படும் அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒருமுறை இரண்டு வட இந்தியர்கள் 22ரூபாய் டிக்கெட்டுக்கு முப்பது ரூபாய் கொடுத்தனர், வழக்கம்போலவே சலித்துக்கொண்டே "ரெண்டு ரூவா சில்லற கொடு" என அந்த கண்டக்டர் சொல்ல அவர்கள், சைகையால் இல்லை என்றனர் அவ்வளவுதான், யாருமே எதிர்பார்க்கவில்லை அந்த கண்டெக்டர் வசை மொழிகளில் கண்டபடி திட்ட ஆரம்பித்தார், ஹிந்தியிலேயே ஒரு கெட்ட வார்த்தையையும் சேர்த்து, "எருமமாடு, சில்ற இல்லாம என்ன மயிருக்குடா பஸ்ஸுல ஏறுரிங்க, பாஷ தெரியாதுன்னா மூஞ்சிலயே குத்திட்வேன்"னு திட்டிவிட்டு மீதம் கொடுக்காமலே அடுத்த இடத்திற்கு நகர்ந்துவிட்டார்.

எதோ சொல்லி அவமானப்படுத்தப்படுகிறோம், ஆனால் என்னவென்று தெரியாததாலும், அந்நிய இடத்தில் எதிர்த்து எதுவும் பேசமுடியாது என்பதாலும், முகத்தை தொங்க போட்டுகொண்டனர். அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த நான் உட்பட எவருமே அந்த கண்டக்டரை எதுவுமே கேட்கவில்லை. எங்களுக்கும் சென்னை அந்நிய இடமாக இருந்தது உண்மைதான். ஒரு இரண்டு ரூபாய் தான் என்னால் அவர்களுக்கு கொடுக்க முடிந்தது. இருவரில் ஒருவர் கண்டக்டரிடம் சென்று இரண்டு ரூபாயை கொடுத்து மீத பைசாவை கேட்க மீண்டும் திட்ட ஆரம்பித்தார், அதே ஹிந்தி கெட்ட வார்த்தையை சேர்த்து "இப்போ மட்டும் எங்கேருந்து காசு வந்துச்சு!" என்றார்.

எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சென்னைவாசி ஒருவர், "உனக்கு தேவை சில்ற தானையா!, வாங்கிகிட்டு மீதிய கொடு, சில்ற இல்லையான்னு அவன கேட்ட வார்த்தைய இங்க நிக்கிற வேற ஆள கேட்டு திட்டு பாக்கலாம்! பாஷ தெரியாதுன்ன ஏறி மிதிக்க வேண்டியது, நம்ம ஆளுங்களையும் இப்டிதானய்யா அங்க திட்டுவானுங்க, ஒழுங்கா மரியாதையா நடந்துக்கோ இல்லனா பஸ்ஸு ஏரியா தாண்டாது!!"னு சொல்லி இறங்கிட்டாரு. வண்டி எடுத்த அப்புறம், "வந்துட்டானுங்க மயிருமாறி"னு சொல்லி தன் இயலாமையை காட்டிகொண்டார்.

இது போன்ற ஆட்களுக்கெல்லாம் எவ்வளவு அழகாக வகுப்பெடுத்தாலும், இன்னொருவனையும் மனுசனா பாக்கணும்ன்ற எண்ணமெல்லாம் வரவே வராது, இது போல சைக்கோக்கள் இங்கும் அங்கும் மட்டுமல்ல, எங்கும் இருக்கிறார்கள். வேற்றுகிரகவாசிகள் இங்கு வந்தால் அவர்களுடன் சம்பந்தம் பேச அனைத்து தகுதிகளும் உடையவர்கள் இவர்கள்! அவர்கள் பூமிக்கு வந்தால் கூடவே இதுபோன்றோரையும் அனுப்பி வைக்கவேண்டும், அவர்களுக்கு பேச்சுத்துணையாக இருக்கும்!

28 Oct 2015

அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு?



கொஞ்ச நாளுக்கு முன்னால் "நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" அப்படின்னு சமஸ் எழுதின ஒரு கட்டுரையில், சிறுதெய்வ வழிபாடுகளை அழித்து பெருதெய்வ கோயில்களும், புதுபுது கோயில் கட்டிட பாணிகளும், தமிழக கடைகோடி ஊர்களில் முளைத்து வரும் இந்த புதிய கலாச்சாரத்தை கால மாற்றத்தின் தொடர்ச்சியாக பார்ப்பதா? இல்லை சங் பரிவார அமைப்புகளின் சல்லிவேர்கள் பரவுவதாக பார்ப்பதா? என ஐயம் வெளியிட்டிருந்தார். அதற்கு முன் காய்ன் கலெக்சன் குறித்தும் அதிலுள்ள போலி சந்தை மற்றும் பழம்பொருள் சேகரிப்பு மோகம் குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த படங்களை பார்த்தால் சிறிது விளங்கும், நான் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்,

  ‘அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு' என்ற ஒன்றை பேஸ்புக்கில் ஒரு நியூமிஸ்மேட்டிக் குழுவில் பார்த்தேன், விலை ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று இருந்தது. அந்த அரியவகை காசுக்கு இந்த விலை கம்மிதான். கிழக்கிந்திய கம்பெனி காசுகள் குறித்து ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்ததால் சந்தேகமாக இருக்க தேடிப்பார்த்தேன், எனக்கு தெறிந்து எம்பெரர்களையும், ராஜ குடும்ப ஆட்களையும் கம்பெனி காசுகளில் பதித்த பெருமை பீத்தகரையன்கள்தான் அவர்கள் ஆனால், இந்தியாவில் இந்து கடவுள்களின் உருவங்களை பதித்து வெளியிடும் அளவுக்கு மூடர்கள் அல்லர்.

அந்த காலத்தில், சில கோவில் நிர்வாகங்கள், ‘கோவில் டோக்கன்-Temple Token' என்று ஒன்றை வைத்திருந்திருக்கின்றனர், தனியே டோக்கன் அடிக்க சோம்பேரித்தனமோ என்னமோ கிழக்கிந்திய கம்பெனி காசுகளை உருமாற்றம் செய்து உபயோகித்துள்ளனர், விருப்பம் போல வருடத்தையும் பதித்து உபயோகித்துள்ளனர், பெரும்பாலும் காசின் ஒரு பக்கத்தை மட்டும் மாற்றியமைத்து, அந்த பக்கத்தில் கடவுள் உருவங்களை பதித்து உபயோகித்துள்ளனர். ஆக மறுபக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் பெயர் இருக்கும். இதையே இப்போது, கிழக்கிந்திய கம்பெனியே இந்து கடவுளின் உருவங்களை பதித்து வெளியிட்டது எனவும், மிகவும் அரிதான காசு எனவும், சில வட இந்திய குழுக்கள் பகிர்ந்து வருகின்றனர். இதை வெறும் 'போலி சந்தை புரளி' என எடுத்துகொள்வதா? இல்லை காவி கும்பலின் சித்து விளையாட்டு என எடுத்து கொள்வதா? என விளங்கவில்லை. தெரிந்தே சிலர் இந்த டோகன்களை கிழக்கிந்திய கம்பெனியே வெளியிட்டது போல பதிவு செய்துவருவது சற்று அச்சமாகவே உள்ளது. ஏனென்றால் இது போன்ற டோக்கன்கள், 'பூஜை காசுகள்-Pooja coins' என்ற பெயரில் இன்றளவும் வாரணாசி, காசி போன்ற ஊர்களின் கோயில் தெருக்களின் கடைகளில் கிடைக்கின்றன, அதை புனித பொருளாக எண்ணி பூஜை செய்து பலர் பூஜை அறையிலும் வைத்து வருகின்றனர்.

ஆக இது போன்ற போலித்தனமான செய்திகளை, வெறும் பணம் சம்பாதிப்பதற்காக பதிவு செய்கிறார்கள் என எடுத்துகொள்ள முடியவில்லை, அதிலும் அண்மைகாலமாக, காவி கும்பல்களின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலேயே உள்ளன. இதிலிருந்து இந்துத்துவ பெருமை பீத்தகரையர்கள் இன்னும் எதையெல்லாம் எடுத்து விளையாட போகிறார்கள் என அச்சமாவே உள்ளது. சமஸ் பதிவு செய்திருந்த அவரின் நண்பர் ஒருவரின் ஐயம், இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது, அதாவாது சமீபகால சாய் பாபா உருவசிலைகள் இப்போது மோடி போல இருக்கிறதாம்!

20 Oct 2015

ஆடோ ஆஃப் - அமானுஷ்யம்



இரவு ஏழு மணி, அம்மா அருகிலிருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு போயிருந்தார்கள், வீட்டில் அந்த சிறுவன் மட்டும் தனியே இருக்கிறான். புது கலர் டிவி வாங்கி ஓரிரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனுக்கு கதவு வைத்த அந்த பழைய டிவி தான் பிடிக்கும் என்றாலும், இந்த புது டிவியின் கலரும், ரிமோட்டும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, ரொம்ப நேரம் டிவி ரிமோட்டின் மெனுக்களை ஆராய்ந்தவாரே இருந்தவனுக்கு 'கார்ட்டூன் பார்க்கணும், அம்மா வந்தா அப்புறம் ஒரே சீரியல் தான்' என ஞானோதையம் வர கார்ட்டூன் சேனல் மாத்தி பார்க்க ஆரம்பித்தான். 

மெத்தை கட்டிலில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான், அவன் முன்னே கட்டிலில் ரிமோட் இருந்தது, டிவி சத்தத்தை தவிற வீட்டில் வேறெந்த சப்தமும் இல்லை. ஆர்வமாய் பார்த்து கொண்டிருக்கையில் திடீரென டிவி ஆஃப் ஆனது, ஃபேனும், லைட்டும் ஆனிலேயே இருக்கின்றன, கரண்டும் போகவில்லை, ரிமோட்டும் கையிலில்லை, ஆக தவறுதலாக ஆஃப் ஆகவும் வழியில்லை. இப்போது ஃபேன் சத்தத்தை தவிற தெருவிலேவையே வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. ஒருகணம் திகைத்து போனான்.

ஃபேனின் சப்தமும், தெருவின் நிசப்தமும், அவனுக்கு பயத்தை வரவழைத்தன. ஏதோ பேயி'தான் டிவியை ஆஃப் செய்திருக்கும் என யோசித்த மறுகணம் அந்த வீட்டிலிருக்க அவனால் முடியவில்லை, பூட்டை எடுத்து வீட்டை பூட்டி, முழு வேகத்தில் அம்மாச்சி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தான். அங்கு சென்றதும்தான், தான் மூச்சு விட்டுக்கொண்டிருப்பதையும், தன் இதையும் துடிப்பதையுமே அவனால் உணர முடிந்தது.

அமானுஷ்ய அனுபவத்தால் தன் வீட்டில் பேய் இருப்பதை உணர்ந்தபோது அவனுக்கு வயது பன்னிரண்டு.

புது கலர் டிவி ரிமோட்டில் 'ஆட்டோ ஆஃப்' மெனு உள்ளதை உணர்ந்தபோது அவனுக்கு வயது பதிமூன்று.

15 Oct 2015

The Art of Handshaking




ஒரு கலாச்சாரத்தில் புனிதமாவோ, சடங்காவோ, வீரமாவோ, அன்பாவோ பார்க்கப்படுற சில பழக்கவழக்கங்கள், வேறு ஒரு கலாச்சார மக்களிடையே தவறாவும், அசிங்கமாவும் ஏன் அறுவருப்பாகவும்கூட பார்க்கப்படும் என்பது அறிந்ததே, இந்த ஸ்கூல்ல, காலெஜ்ல, அப்புறம் வேலை பாக்குற இடத்தில் என எல்லா இடத்திலும், இன்னொருத்தர்கிட்ட எப்படி கைகுழுக்குவது என க்ளாஸ் மேல க்ளாஸ் எடுத்துவிட்டனர். அதிலும் கை கொடுத்தலில் இருக்கும் “Body Language” மற்றும் “The Art of Handshaking” என உளவியல் சார்ந்த தியரிகள் வேறு, தியரிகளின் உண்மை தன்மையில் அய்யமேதுமில்லை, ஆனாலும் கை கொடுத்தல் பல நேரங்களில் அசௌகர்யத்தையே கொடுக்கும். உண்மையில் அந்த உளவியல் தியரிகள் கூட காரணமாக இருக்கலாம். ஆக பல சமயங்களில் நண்பர்களிடையே விளையாட்டாய் சிரித்து கொண்டே அரசியல்வாதி போல் கும்பிடு போடுவதும் உண்டு, பதிலுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரிப்போடு கும்பிடு வரும், அதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யும்.

நாம கும்புடு போடுவது, கை குழுக்கும் சமூகத்துக்கு காமெடியாக தெறியலாம், ஆனால் நமக்கு கை குழுக்குவது காமெடியாக தெறியாது, அதிலொரு ப்ரொஃபசனிலிஸ்ம் தான் நமக்கு தெறியும், ஆகவே தான் இங்கு இதை பதிய விளைகிறேன், தொன்னூறுகளுக்கு முன்பு வரை பல கை குழுக்கும் சமூகங்கள் தங்களுக்குள் சில ஒப்பந்தங்கள்(deal) செய்து கொள்ளும் போது கையில் எச்சில் துப்பி கை குழுக்கி கொள்ளும் முறையை வைத்திருந்தன, தற்போது அவற்றை பின்பற்றுவது இல்லை, அதற்கு காரணமொன்று தனியே தேவையில்லை.

சாதாரணமாக கை குழுக்கும் போதே ஏகப்பட்ட கிருமிகள் பரவுகின்றன என்று பல ஆய்வுகள் சொல்கின்றன, மேலும் கண்ட இடங்களில் கையை வைத்து பின் எதிரிக்கு கை கொடுத்து பழிவாங்கும் பல சீன்களும் ஹாலிவுட் படங்களில் பார்த்தது உண்டு, ஆக நமக்குள் நாம் கை குழுக்கிக்கொள்ளும் போது இது போன்ற பல சீன்கள் கண் முன்னே வந்து போகும்.

14 Oct 2015

'C O U R T' Movie Poster  |  'கோர்ட்' திரைப்பட சுவரொட்டி



Ballpoint Pen on papers


Pen              Nataraj Gelix(0.5mm)
Paper           Brustro (200gsm A4)
Duration       1.5 hours

12 Oct 2015


Manorama  |  மனோரமா




Ballpoint Pen on papers


Pen              Nataraj Gelix(0.5mm)
Paper           Brustro (200gsm A4)
Duration       0.5 hour

9 Oct 2015

தூக்கம் பறித்த வார்த்தைகள்

அவனுக்கு எட்டு மணிக்குதான் தினமும் பஸ். ஆஃபீஸ் முடிந்து ஏழு நாற்பதுக்கு அருகிலிருக்கும் பேருந்துநிருத்தத்திற்கு சென்று காத்திருப்பது வழக்கம். காத்திருப்பது என்றால் பேருந்துநிருத்தத்தின் நீண்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பது அல்ல, தினமும் நிற்கவே செய்வான். அது ஒரு நீளமான பேருந்துநிருத்தம், நான்கைந்து நீண்ட இருக்கைகள் இருக்கும் என்றாலும் யாராவது ஒருவராவது அவைகளில் அமர்ந்திருப்பர். அவனுக்கு தனியே அமர்வதுதான் இஷ்டம் என்பதால், ஒருநாளும் அவற்றில் அமர்ந்தது இல்லை.

அன்று ஏனோ சீக்கிரம் வேலைகள் முடிய ஏழு இருபதிற்கே வந்துவிட்டான், ஒரு நீண்ட இருக்கை மட்டும் ஆளின்றியிருக்க, மீதமணைத்திலும் ஓரிருவர் அமர்ந்திருந்தனர். பேருந்திற்கு வெகுநேர காத்திருக்க வேண்டுமென்பதால் சென்று அமர்ந்தான். பேருந்து நிருத்தத்திற்கே உண்டான அழுக்கு துணி உடுத்திய தாடி மழிக்காத உருவம் கொண்ட ஒருவர் அவனருகே வந்து நிற்பதை கவணித்துகொண்டு கையிலிருந்த ஃபோனை நோண்ட ஆரம்பித்தான். கண நேரத்தில், மெலிந்த குரலில் “கொஞ்சம் அங்க போயி வுட்க்காருப்பா!” என்றார் அவர். அவன் கவணிக்காததுபோல் இருந்தான். அப்படி அவன் கவணிக்காதபடி அமர்ந்திருந்தது அவனின் அன்றைய தூக்கத்தை பறிக்கப்போகிறது என்பது அப்போது அவனுக்கு தெறியாது.

ஒரே நிமிடம்தான்... கேட்டதை வாங்கிதறாத பெற்றோரிடம் கத்தும் குழந்தை போல சத்தமாக கத்த ஆரம்பித்துவிட்டார், “படுக்க சீட்டுதானே கேட்டேன், உங்களுக்கெல்லாம் வீடு இருக்கு, வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு காத்திருக்கிங்க, எனக்கெல்லாம் என்ன இருக்கு, நான் என்ன வீடு கட்ட காசு கேட்டேனா, இல்ல சோத்துக்குதான் காசு கேட்டேனா! நகந்துபோககோட மாட்டேன்றிங்க”னு கத்திக்கொண்டே தரையில் படுத்து, வைத்திருந்த துணியால் போற்றிக்கொண்டார். சுற்றியிருக்கும் அனைவரின் கண்களும் அவனை வித்தியாசமாக பார்க்க, சட்டென எழுந்து அடுத்த பேருந்துநிருத்தத்திற்க்கு நடக்க தொடங்கினான்.

அங்கிருந்தவர்களெல்லாம் செல்லும் வரை, அவர் கத்தின வார்த்தைகள் அந்த நீண்ட இருக்கையில் சாவகாசமாய் படுத்துக்கொண்டது.

27 Sept 2015

கம்பெனி காசுகள்



என்னிடம் இருப்பதிலேயே ரொம்போ பழைய காசுகள் இவை இரண்டும் தான், ஒன்று டச்சு கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1790), இன்னொன்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினுடையது(1862). சில வருடங்கள் முன்னால பழைய காசுகள் சேகரிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருந்தபொழுது இந்த காசுகள் கிடைத்தன, அப்போவெல்லாம் பழைய காசுகளுக்காக நிறைய தெறிந்த நபர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு, வீடுமுழுக்க தேடினாலும் அப்போது சமீபத்தில் செல்லாமல் போன ஐந்து, பத்து பைசாக்கல் தான் கிடைக்கும் வேறு உருப்படியான எந்த ஒரு காசும் கிடைக்காது. எனக்கு மட்டுமல்ல நாணயம் சேகரிக்கும் எவருக்குமே இந்த ஐந்து பத்து பைசாக்கள் சந்தோசத்தை கொடுப்பது இல்லை. 

அப்போது எனக்கு தேவையெல்லாம் சுதந்திரத்துக்கு முந்தய கால காசுகள்தான். என் சொந்தக்கார மாப்புள ஒருவனிடமிருந்துதான் இப்போது என்னிடமுள்ள முக்கால்வாசி காசுகள் கிடைத்தது தனி கதை, அவனின் வீட்டில் அந்த காசுகள் ஒரு தானிய பெட்டியில் இருந்தன. அவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்பதாலும், நான் கேட்டுக்கொண்டதாலும் என்னிடம் கொடுத்தான், என் கணிப்புப்படி அந்த காசுகள் அவனின் தாத்தாவினுடையதாக இருக்கலாம், சைக்கிலுக்கு பஞ்சர் ஒட்டுமொரு இடம் அவனின் வீட்டிலிறுக்கும், பஞ்சருக்கு வாங்கிய காசுகளை அதே போன்றதொரு தானிய பெட்டியில் தான் சேர்த்துவைப்பார்கள், நெற்குறுதும் வீட்டிலிறுந்தது. உணவுக்காக பணம் செலவாகாததால் அந்த காசுகள் செலவாகாமலே இருந்திருக்கலாம் என்பதும் என் கணிப்பு.

சரி இந்த இரண்டு காசுக்கு வருவோம் இவை இரண்டில் பிரிட்டிஷ் இந்தியா விக்டோரியா ராணியின் ஒரு ரூபாய் காசு நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றது, மற்றுமொரு டச்சு கிழக்கிந்திய காசு, நாங்கள் இருந்த ஒரு பழைய காலத்து வீட்டின் கொள்ளையிலிருந்து கண்டெடுத்தது, ஆனால் கிடைக்கும் போது அது காசு என தெறியாது, அந்த அளவுக்கு அதில் துரு ஏறியிருந்தது. அது என்னவென்று தெறியாமல் விளைவாடுவதற்காக எடுத்து வைத்திருந்தேன். ரொம்ப நாட்களாக அது எங்க வீட்டு பாத்ரூமின் சிலாப்பிலேயே கிடந்தது. காசுகள் பற்றிய ஒரு பொசெஸ்ஸன் வந்ததும், எதார்த்தமாக பாத்ரூமிலிருந்த ஆசிட்டை ஒரு கிண்ணத்தில் நிரப்பி அதை மூழ்கச்செய்து பார்த்த பொழுதுதான் அது ஒரு காசு என்பதே தெறிந்தது, அந்த தருணத்தின் சந்தோசம் அற்புதமானது, என் ஊரிலேயே என்னிடம் தான் ரொம்போ பழையதொரு காசு இருக்கின்றது என்ற பெருமை கலந்த சந்தோசம்.

அதுபோன்றதொரு தருணமேதும் அதன் பின் நடக்கவில்லை. அதன் பின பழங்கால பொருட்களை தேடுவதும், அவற்றை மியூசியம்களில் பார்ப்பதும் பிடித்ததாக இருந்தது. இப்போதெல்லாம் அவை எதுவுமே இல்லை எல்லா பழைய பொருட்களையும், காசுகளையும் இண்டெர்நெட்டில் பார்ப்பதோடு சரி. காரணம் அதன் பின் இயங்கும் பெரிய போலிச்சந்தை. என்னிடமிருக்கும் காசுகளை பற்றி படிக்க கூகுள் செய்யும் போது பலவற்றை படித்தேன், இந்த பழம்பொருள்/காசுகள் சேகரிப்பின் மீது இருக்கும் மோகத்தின் காரணமாக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், எவ்வளவு செலவு செய்கிறார்கள், எவ்வளவு ஏமாறுகிறார்கள் எவ்வளவு ஏமாற்றுகிறார்கள் என்பன போன்றவை அவை. சில சைட்டுகளும், சில தகவல்களும், சிலவற்றின் மதிப்புகளும் பெருத்த தலைவலியை கொடுத்தன அத்தோடு சேகரிப்பின் மீதிருந்த ஆசையை விட்டுவிட்டேன், பின்னர் தரவுகளை படிப்பதோடு மட்டும் சரி. இன்றுவரை தானாக கிடைக்கும் சில பழங்கால பொருட்களை வைத்துக்கொண்டு அவற்றை பற்றி தேடிப்படிப்பதோடு நிறுத்திக்கொண்டேன். காசுகளையும் பொருட்களையும் தேடுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன இந்த ரெண்டு கம்பெனிகளும், அவற்றின் காசுகளும் இங்கு வராமலிருந்தாலே நன்றாக இருந்திருக்கும். இந்த கம்பெனிகள் நம்மை அடிமையாக்கின, நம் வளங்களை சுரண்டின, நம்மை பாழ் படுத்தின, இந்த காசுகளை பார்த்தாய் மனக்கண்ணில் நான் பார்க்காத கஷ்டகாலங்கள் தான் பிம்பங்களாக வருகிறது, மாறாக பழைய ஐந்து, பத்து, இருபது பைசாக்கள் பார்க்கும் போது, நான் உணர்ந்த மிட்டாயும், பெட்டிக்கடையும், ஸ்கூலும் தான் பிம்பங்களாக மலர்கிறது.

17 Sept 2015

மக்பூல் ஃபிதா ஹுசைன்



இன்று மக்பூல் ஃபிதா ஹுசைனின் நூறாவது பிறந்தநாள். கூகுளின் டூடுல் இன்று அருமையாக வடிவமைக்கப்பட்டிறுந்தது. கையில் எப்போதும் ஒரு தூரிகையை, ஊன்றுகோலாய் வைத்திருப்பார் அதனையும் இணைத்து அழகாக வரைந்திருந்தனர். PAG - Progressive Artist Group அப்படினு 1947ல் பிரிவினைக்கு பின் ஒரு அமைப்பு ஆரம்பித்து இந்திய ஓவியக்கலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டு சென்றார். திரைப்படங்களுக்கு பிரிண்ட் மற்றும் போஸ்டர்களும் வடிவைத்து வந்தவர், சில படங்களை இயக்கியும் உள்ளார். “Through the eyes of a painter”ன்ற 1967 அவர் எடுத்த 17 நிமிட குறும்படம் அதில் குறிப்பிடத்தக்கது, இந்தியாவின் பிகாஸ்ஸோ என அழைக்கப்பட்டவர், இந்தியாவின் மூன்று பத்ம விருதுகளையும் பெற்றவர். தன்னுடைய 80வது வயதுக்குபின் பல சர்ச்சைகளில் சிக்கினார், இந்து கடவுள்கள், பாரத மாதா இவர்களின் திருவுருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் பல இந்துத்துவ அமைப்புகள் அவர் மீது வழக்குகள் தொடுத்தன, ஒருமுறை அவரின் வீடும் தாக்கப்பட்டது, நாடு கடத்துமாறும் பிரச்சனைகள் செய்தனர். இதனால் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்து அங்கேயே வசித்து அங்கேயே இறந்தும் போனார். கடைசி காலத்தில் அவரால் இந்தியாவில் வாழமுடியவில்லை, சர்ச்சை காலங்களில் இந்திய ஊடகங்கள் “MF Hussain – Painter or Butcher”, “Art for Mission Kashmir” என்று அவரை தேசவிரோத ஆளாக காட்டினர்.

.

.

.

.
.
இப்படியெல்லாம் எழுதுனா ரொம்போ ஃபார்மலா இருக்கும், ஆனா மனுஷன் செம 2011ல தன்னோட 95வது வயதுல ஹார்ட் அட்டாக்ல இறந்தாரு, இவர் வரைந்ததுக்கு இந்து அமைப்புகள் ஒன்னும் பன்னலனா தான் ஆச்சர்யம், அதும் 1970ல வரைஞ்ச ஒரு ஓவியத்துக்கு 96ல பிரச்சன பன்னுனாங்க. 2010ல கத்தார் அவருக்கு சிறப்பு குடியுறிமை கொடுத்தது, உடனே தனது இந்திய பாஸ்போர்ட்டையும் சரண்டர் செய்துவிட்டார். நாடெல்லாம் மனுசனுக்குத்தான் கலைஞனுக்கு இல்லைனு நிரூபித்தவர், அவரின் சில பேட்டிகளை பார்த்திருக்கிறேன் செம ஷ்டைலாக இருக்கும், அவருக்கு ஃபெர்ராரி கார் மிகவும் பிடிக்குமாம், அதும் சிகப்பு கலரில். உருவங்களை அல்லாவை தவிர வேரு யாரும் படைக்கமுடியாது, ஓவியம் வரைதல் பாவம் என இஸ்லாமிய நண்பர்கள் சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறேன். ஆச்சர்யமாக இஸ்லாத்திலிருந்து ஒரு ஓவியர் அதும் தனது பதின்ம வயதிலிருந்து வரைந்து வந்திருக்கிறார், அந்த ‘through the eyes of a painter’ படம் ஒன்னும் அவ்வளவு பெரிய படம் அல்ல, சாதாரண படம் தான் அவரின் சோதனை முயற்சி, ஒரு கலைஞனின் பார்வையில் ஒரு கிராமத்தின் நிகழ்வுகளை படமாக்கியிருப்பார். கலைஞன் எல்லாவற்றிலும் எப்படி பெண்மையை பார்க்கிறான் என்பது அந்த படம் முழுதும் பார்த்தால் புரியும். கிட்டதட்ட 90வருடங்கள் தூரிகையை பிடித்தவர். அந்த PAG குரூப்பை பற்றி படித்து பாருங்கள் அதில் இவருடன் சேர்ந்து இந்து, முஸ்லிம், கிருஷ்டியன் என எல்லாருமே இருப்பார்கள், அவர்கள் இல்லைனா இன்னைக்கு மாடர்ன் ஆர்ட் இந்தியாவிற்குள்ளேயே வந்திருக்காது, குறிப்பாக, கியூபிச வகை ஓவியங்கள்.

நூறு அகவைக்கு பின் அவர் இறந்திருக்கலாம் என்பது மட்டுமே, அவரின் வாழ்வில் ஒரே ஒரு குறை, மற்றபடி, அவர் தன் சிறு வயதில் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் சேர்த்து, செம்மையாகவே வாழ்ந்து இறந்தார்.

14 Sept 2015

றிசா - லொஇ


இப்பொழுதெல்லாம் எந்த பெயர்ச்செற்களை பார்த்தாலும் அந்த பெயர்களின் எழுத்துகளினூடே சில மாற்றங்கள் செய்து வித்தியாசமாக எழுதிப்பார்க்க மனம் எத்தனிக்கிறது.


காரணம் ஒரு ஃபேஸ்புக் நண்பர், அவர் பெயர் ‘றிசா’. இஸ்லாமியக்கல்லூரியில் படித்து வந்தமையால் ரிசுவான், ரியாஸ் போன்ற பெயர் கொண்ட நண்பர்கள் உண்டு, ஒரு கணம் கூட அவர்களின் பெயர்களை ‘றிசுவான்’, ‘றியாஸ்’ என்றும் கூட எழுதலாமே என்று நினைத்தது இல்லை. இவ்வாறு எழுதலாமா என்றெல்லாம் தெறியவில்லை ஆனால் ‘றிசா’ என்பது மிகவும் பிடித்திருந்தது, அதில் ஒரு ஈர்ப்பும் இருப்பதாகவே தோன்றுகின்றது. பேஸ்புக் வெரிஃபிகேஷன் தொல்லையால் நண்பரின் பெயர் 'Riza Hassen' என மாறியதில் அவருக்கு இணையாக எனக்கும் வருத்தம் இருந்தது. 

சென்ஐ வந்த பிறகு, சில வெஸ்டர்ன் ஸ்டைல் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் லோகலைசேஷனுக்காக ஆங்கிலப்பெயர்களின் கூடவே தமிழிழும் அவற்றின் பெயர்களை முகப்பு பேனர்களில் உபயோகப்படுத்தியிருப்பதை காணமுடிந்தது, அதிலும் சிலவற்றின் பெயர்கள் சற்று ஈர்ப்பாக இருக்கும். ‘LOIEE’ எனும் கடைக்கு, ‘லொஇ’ என தமிழில் எழுதியிறுந்தனர். இவற்றையெல்லாம் தினமும் பார்த்து வருவதால் தினமும் நண்பர்களின் பெயர்களையும் அவ்வாறு எதாவது மாற்றம் செய்து எழுதிப்பார்க்க தோன்றுகின்றது.

பள்ளியில் படிக்கும் போது கடிதம் எழுதும் பயிற்சிகளில் “மதிப்பிற்குறிய ஐயா,” என்று எழுத வேண்டாம் “மதிப்பிற்குறிய அய்யா,” என்றே எழுதுமாறு தமிழாசிரியர் தெளிவுபடுத்தியிருந்தார், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெறியவில்லை. இவற்றை நீங்களும் உபயோகித்து பார்க்க போகிறீர்கள் என்றால், பெயர்ச்சொற்களை மற்றும் முயற்சி செய்து பார்க்கவும், மற்ற சொற்களினிடத்தே வேண்டாம். அதாவது வாழ்க்கை, நண்பன் போன்றவற்றை வாழ்க்ஐ, னண்பன் என்றெல்லாம் எழுதி பார்க்க வேண்டாம் அது நாராசமாக இருக்கும். 

7 Sept 2015

Al Pacino  |  அல் பச்சினொ




Ballpoint Pen on papers


Pen              Riton Ballpen(0.5mm)
Paper           Brustro (200gsm A4)
Duration       2.5 hours

6 Sept 2015

புது நூரு ரூபாய்


ரெண்டு நாள் முன்னால எடிஎம்’ல இருந்து எடுத்த ஒரு நூரு ரூபாய் நோட்ட பாத்து பயந்துடேன், ஒரு வேலை இது கள்ள நோட்டா இருக்குமோன்னு. இந்த ஃபோட்டோவ பாத்தா உங்களுக்கே புரியும். ரூபாய் நோட்டுல இருக்குற நம்பர் அப்டியே சின்னதுல இருந்து பெருசாகிட்டே போகிருக்கு.


அப்புறம் கூகுல் பன்னுனப்புறம் தான் தெரிஞ்சது, போன ஜூலைலயே ஆர்.பி.ஐ இந்த மாதிறி புது விதமான பேட்டர்ன்’ல நூரு ரூபாய் நோட்டு இருக்கும்னு அனவுன்ஸ் பன்னி ரிலீஸும் பன்னிடாங்களாம். இந்த நியூஸ அப்பவே படிச்ச நியாபகம், ஆனா ஒழுங்கா கவனிக்காம நான் என்ன புரிஞ்சிகிட்டேனா, இனி நூரு ரூபாய் நோட்டெல்லாம் சின்ன நம்பர்ல இருந்து பெரிய நம்பர்ல முடியும்னு. ‘RBI issues new 100Rs notes with numbering pattern in ascending size’. இந்த Ascending size’ன்றத தான் நான் Ascending numbers’னு நினச்சுட்டு விட்டுடேன். ஒழுங்கா கவனிச்சிருந்தா இப்போ இந்த ஷாக் வந்திருக்காது. அதுவும் அந்த கடைசி நம்பர பாத்ததும் தான் ரொம்போ ஷாக் ஆகிட்டேன், எவ்ளோ பெரிய சைஸ்!

2 Sept 2015

கீழத்தெரு


புதியதலைமுறை’ல ஒரு முறை கோணங்கி சொன்னார் “இன்னமும் கீழத்தெருவும் மேலத்தெருவுமே ஒன்னு சேரல, இதுல எங்கடே சாதியற்ற சமூகம் அமைப்பிங்க”னு. அன்றுதான் எனக்கு விளங்கியது எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட கிராமத்தில் வாழ்கிறோம் என்று. இரண்டையும் இணைக்குமிடம் பள்ளிகூடம்தான் அதுலயும் தான் எத்துனை வேறுபாடு. இருந்தாலும் கோயிலயும், சுடிகாட்டையும் ஒப்பிட்டு பார்த்தா, பள்ளிகூடம் எவ்வளவோ தேவலாம். எல்லா ஊருலயுமே அசால்டா இறுக்குது இந்த கீழத்தெரு மேலத்தெரு சாதிய சம்பரதாய அடக்குமுறை. மேலத்தெருவில் காலியாகும் வீடுகளில் சமீபமாக கீழத்தெருவினர் குடியேறுகின்றனர். ஆனால் அதுபோல கீழத்தெரு வீடுகளில் மேலத்தெருவினர் மாறுவதில்லை. வீடே இருப்பதில்லை என்பதும் ஒருபுறம் இருக்க, வீடிருந்தாலும் குடியேறுவதுமில்லை, மேலத்தெருவின் வீடுகள், கீழத்தெருவின் இடங்களை தின்று மேலத்தெருக்கலாக மாற்றுகின்றன, வாய்ப்பிருக்கும் சிலர் மேலத்தெருவில் குடியேறிக்கொள்ளலாம். சமீப காலமாக கிராமங்களில் கீழத்தெருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனவே தவிற, இரண்டும் ஒன்னு சேரவில்லை.


இதையெல்லாம் யோசிக்கறப்போ, நாங்க இப்போ குடியிருக்குற அக்ரகாரம் நியாபகம் வந்தது, அது பரவாயில்ல இப்போ எல்லோரும் குடியேறிவற்றாங்க, அக்ரகார ஆட்கள் டவுன் பக்கம் போறதால, இன்னைக்கு எங்க அக்ரகாரத்துல சரிசமமா எல்லாரும் இருக்கோம், இங்க சரிசமம்னு சொன்னது குடியிருக்குற அளவுல.

பி.கு: எங்க அக்ரஹாரத்துல சிவன் கோயில் கீழஅக்ரஹாரத்துலயும், பெருமாள் கோயில் மேல அக்ரஹாரத்துலயும் இருக்கு, ஆக மொத்தம் இங்கயும் சாதிமாதிரி என்னமோ இருக்கு போல.

31 Aug 2015

டிராக்ஸ் ரன்


இன்டெர்னெட்டே இல்லாத லேப்டாப்ல கூகுல்.காம் ட்ரை பன்னா ஓபன் ஆகுமா? ஆகாது. ஆனா ஒரு ‘சீக்ரெட் கேம்’ ஓபன் ஆகும்.



நேத்து, இன்டெர்னெட் கன்னெக்சன் இல்லாதப்ப ‘கூகுல் க்ரோம்’ல ஏதோ வெப்சைட் ஓபன் பன்ன ட்ரை பன்னப்போ ஆகல. நெட் கனெக்சன் இல்லாதப்போ ட்ரை பன்னுனா ஒரு எர்ரர் மெஸ்ஸேஜும் வரும் “Unable to connect to the Internet”னு அந்த மெஸ்ஸேஜ் மேல ஒரு டைனோசர் சோகமா நிக்கும், எல்லோரும் பார்த்திருப்போம். ஆனா உத்து பார்த்திருக்க மாட்டோம். எதார்த்தமா அத உத்து பாத்துற்றுக்கப்போ அது கண்ண சிமிட்டுச்சு, ஆச்சர்யமா மறுபடியும் பார்க்க மறுபடியும் சிமிட்டிச்சு.

ஏதோ ஒரு ஆர்வத்துல ஸ்பேஸ்பார தட்ட டைனோசர் நின்ன இடத்துலயே ஓட ஆரம்பிச்சுடுச்சு, அப்புறம்தான் தெறிஞ்சுச்சு அது ஒரு கேம்னு, ஒரு பாலை வனத்துல ஓடுற மாறி கேம் அது, செடிகளும், காக்காக்களும் தடைகளாக வரும், நாம டைனோசர எதுலயும் மோத விடாம தாவி குதிச்சு ஓட வைக்கனும!.

30 Aug 2015

காமெரொன் டியாஸ்


காமெரொன் டியாஸ் - சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ் மாதிரி சில படங்கள்ல நடிச்சிருப்பாங்க, ஒரே மாதிரியான நடிப்பு எல்லா படங்கள்லயும் இருக்கும், இவரின் ஒரு ஐந்தாறு படங்கள் பார்த்தது உண்டு. எந்த படங்களிலும் ஒரு ஈர்ப்பு இருந்தது இல்லை கடைசியாக இவரின் ஒரு படத்தை பார்க்கும் வரை.




அந்த படம் ‘My sister’s keeper(2009)’. கேன்சர் போன்ற ஒரு சிவியர் நோயால் ஒரு சகோதரி(15) இறக்க போகிறாள், அவளை காப்பாத்துவதற்க்காக இன்னொரு மகளை(11) பெற்று வளர்க்கிறார்கள்(savior sister-என்ற பதத்தை கூகுல் பன்னவும்). அதாவது நோயுற்ற மகளுக்கு தேவையான இரத்தத்திசு கொண்ட குழந்தையை பெற்றெடுப்பது, அது மட்டுமில்லாமல் இங்கு அக்காவிற்காக, தங்கையின் ஒரு சிறுநீரகத்தையும் கொடுக்க முன்னரே முடிவெடுத்து விடுகின்றனர். இந்த விசயம் தெரிந்ததும் அந்த பதினோரு வயது தங்கை தன் சிறுநீரகத்தை கொடுக்க மறுக்கிறாள். தன் உடல் தனக்கே சொந்தம் என் அனுமதி இல்லாமல் என் சிறுநீரகத்தை தன் சகோதரிக்கு தர முடியாது என்றும், அவ்வாரு நான் கொடுத்தால் தன்னால் விளையாட, டான்ஸ் ஆட, குழந்தை பெற்றுக்கொல்ல முடியாது என கூறி சிறுநீரகத்தை தானம் செய்ய மறுக்கிறாள். ஒரு வக்கீலையும் சந்தித்து தனக்காக தனது பெற்றோர்களை எதிர்த்து வாதாடும்படியும் கேட்டுக்கொள்கிறாள்.


ஒரு மகள் சாகக்கிடக்க, மற்றொரு மகள் அவளுக்கு சிறுநீரகம் கொடுக்க மறுக்க, செய்வதறியாது தவிக்கும் அம்மா ரோலில் காமெரொன் நல்லாவே நடிச்சிருப்பாங்க, தானும் ஒரு வக்கில் என்பதால் தன் இளைய மகளுக்கு எதிரா, அவளின் சிறுநீரக தான உதவி வேண்டி வழக்கை தொடருவார்.

படத்தின் முதல் பாதியில் தங்கை மேல் நமக்கு வெறுப்பு வந்தாலும், பிறகு அது வெயில் பட்ட பனியாய் மறந்துவிடும், ஏன் என்பதன் காரணத்தை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும், ஹாஸ்பிடல் பெட்ல மூத்த மகள் சாகும் முன்னால ஒரு கான்வர்சேஷன் முடிஞ்சதும் டியாஸ் தேமி அழுது மகள் கூடவே சேர்ந்து தூங்கிடுவாங்க, அது தான் மூத்த மகளின் மற்றும் மகளுடனான கடைசி இரவு அவருக்கும். எல்லாருமே நல்லா நடிச்சிருந்தாலும், எனக்கு பெருசா பட்டது டியாஸின் நடிப்பு தான். பழைய ‘தி மாஸ்க்’ மூவில செம அழகா வற்ற ஹீரோயினும் இவங்க தான், அதுதான் டியாஸின் முதல் படமும் கூட. உண்மையில் ஒரு ஒர்த்தான ஒரு ஃபீல் குட் மூவி.

பை த வே இன்னைக்கு காமெரொன் டியாஸின் பிறந்தநாளாம், My sister’s keeper மூவியோட ஃபேஸ்புக் பேஜ்ல இப்போ தான் பார்த்தேன். ஏற்கனவே இந்த படத்தை பத்தியும், டியாஸ் பத்தியும் எழுதலாம்னு இருந்தேன். இன்னைக்கு எழுதினா நல்லா இருக்கும்னு அவசரமா எழுதியது. நிறைய நல்ல விசயங்களை எழுத வில்லை, படம் பார்த்து உணர்ந்துகொள்ளுங்கள்.

29 Aug 2015

அந்தோனி தாத்தா - பேய் கதை


“ஏன்டா மாமா இந்த பேயிலாம் இருக்குனு நம்புறியா?”
“ஏன்டா இப்டி திடுதிப்புனு கேக்குற!”
“நேத்து, ‘எக்ஸார்சிஸ்ட்’னு ஒரு படம் பாத்தேன் மச்சி சும்மா மிரட்டிடானுங்க”
“சேரி அதனால இந்த திடீர் குவெஸ்டினா?, படம் தானே மச்சி, படத்துல எல்லாம் அப்டிதான் காட்டுவானுங்க, படம் ஓடனும்ல”
“அதுக்கு இல்ல மச்சி, நேத்து நயிட்டு, ஒன்னுக்கடிக்கலாம்னு கொல்லை பக்கம் போனேன், ஏதோ ஒன்னு பின்னால சட்டுனு வந்து போன மாதிரி இருந்ததுச்சி”
“பின்னால வந்துச்சா!, இல்லையே ஒன்னுக்கு முன்னால தானே வரும்!”
“மூடுடா!, அப்புடியே உடம்பெல்லாம் நடுங்கிடிச்சுன்றேன், காமெடி பன்ற”
“அப்டி இல்லடா, இருட்டுநாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்கும், இதுல நீ பேயி படம் வேற பாத்துட்டு கொல்லைல ஒன்னுகடிக்க போனா பயம் வராம எப்புடி”
“அதான் மச்சி டவுட்டு, பேயே இல்லனா நாம ஏண்டா பயப்படனும், எனக்கு ஏன் உடம்பெல்லாம் நடுங்கனும்”
“மயிரு, சாமியே இல்லாம அவனவன் சாமி வந்தமாறி நடிக்கிறான், அது மாதிரி தான் இதுவும் மூடு”
“நீ என்ன வேனா சொல்லு, ஆனா பேயி இருக்கு நா நம்புறேன்”
“எப்புடிடா சொல்லுற?”
“அதெல்லாம் எனக்கு தெறியாது சாமியுமிருக்கு பேயுமிருக்கு!”
“பயமும், பக்தியுமமிருக்குனு ஒத்துக்கிறேன் ஆனா, பேயுமில்ல சாமியுமில்ல இத உனக்கெல்லாம் பேசி புரிய வைக்க முடியாது, நா கிளம்புறேன் ஆள விடு”
“இரு மச்சி, வேனா ஒன்னு பன்னலாம், வா இன்னைக்கு நைட்டு சர்ச் பக்கத்துல இருக்க கல்லரைக்கு போலாம்”
“போயி?”
“ப்ரேம் சொல்லுவான் தெறியுமா, அங்க டெய்லி நைட்டு செத்து போன அந்தோனி தாத்தா வருவாருனு. வா, போயி பாக்கலாம் எதுவுமே இல்லனா ஒத்துக்குறேன்”
“டேய்!, அவனே ஒரு புளுவுனி அவன் சொன்னதையெல்லாமா நம்புற! அதும் நாம பத்தாவது படிக்கிறப்போ அவன் சொன்னது அது!”
“சரி அவன விடு, சூசை போன மாசம் சொன்னான்ல, மீன் பிடிக்க கல்ற வாய்க்காலுக்கு போனப்போ பாத்தேனு, அதும் இல்லாம புடிச்சு வச்ச மீனையெல்லாம் எதோ தின்னு மீனுமுல்லு மட்டும் தான் மீதி இருந்ததுனு சொன்னான்”
“உனக்கெல்லாம் சொன்னா புரியாது, பேயி இருக்குனு நம்பிகிட்டே நைட்டு கல்றைக்கு கூப்பிடுற பாத்தியா, அந்த தைரியத்துக்கே வர்ரேன் போலாம்”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, அதான் கூட நீ வர்ர இல்ல அந்த தைரியத்துல தான் சொல்லுறேன் வா போலாம். நைட்டு பன்னண்டு மணிக்கு கரெக்டா வந்துரு. வர்ரப்போ மூங்கில்ல ஒரு சிலுவை ரெடி பன்னி கொண்டு வா, அந்தோனி தாத்தா சமாதில அடிக்க போறேன்!”
“இது வேறையா!, சரி கொண்டுவாறேன்”
.
.
(பன்னிரண்டு மணி - கல்லறை)
“மாப்ள வா ரெண்டு பேரும் ஒன்னா போலாம், சிலுவைய கொடு நா அடிக்கறேன்”
“இந்தா”
“மெதுவா போ மாப்ள, எதாவது தெரியுதா?”
“ஒரு மயிரும் இல்லடா இப்பவாது நம்புறியா”
“இல்லடா, நீ அந்தோனி தாத்தா இடத்துகிட்ட போ”
“நா போயிட்டேன் வா!”
“மாப்ள கைலி அவுந்திருச்சுடா, எதோ அவுத்துவுட்ட மாறி இருந்ததுடா!”
“என்ன அந்தோனி தாத்தாதான் அவுத்துவுட்டாறா?. மூடிட்டு வாடா!”
“எனக்கென்னமோ இங்க என்னமோ இருக்குறமாறி தான் இருக்கு, இரு சிலுவைய அடிக்கிறேன், அடிச்சதும் போயிடலாம்”
“சேரி அடி”
.
.
சுற்றுமுற்றும் பார்த்தபடியே சிலுவைய அடிச்சுட்டு மேல எழும்பி, “போலாம்”னு ஒரு அடி எடுத்து வைத்தான். அந்தோனி தாத்தா அவன் கைலியை பிடித்து இழுத்தார். பயத்தில் அவர் சமாதி மேலேயே மயங்கி விழுந்தான்.
.
.
.
.
.
தெளிந்து எழும்பியவன் தன் வீட்டுக்கட்டிலில் கிடந்தான், நண்பனும் உடனிருந்தான். சிலுவை அடித்து அவன் கைலி கிழிந்திருந்தது.

17 Aug 2015

நாற்பதுகளில் சாகும் ஓர் ஆண் சமூகம்




நாற்பது வயதில் இறந்து போன பல ஆளுமைகளை நாம் கடந்து வந்திருப்போம். சமூகத்துக்கும் ஏதேனும் செய்துவிட்டு செத்தவர்கள் அவர்கள். சே, மீசைகவி, மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங், இப்படி பட்டியலை நீட்டலாம். ஆனால் இவர்கள் இறந்துவிட்டவர்கள், இன்று ஆளுமைகளே காணக்கிடைத்தல் அரிது என்பதால் நாற்பதுகளின் ஆளுமைகளின் மரணம் நாம் அவ்வளவாக சந்திக்காத ஒன்று, சந்திக்க விரும்பாத ஒன்று.



மாறாக கிராமங்களில் ஒரு சமூகம் நாற்பதுகளில் ஆண்களை இழந்துகொண்டு இருக்கிறது, பறை இசை காதலர்கள், பறையை தன் மூச்சாக என்னி சாகுறவரைக்கும் பறைகொட்ட ஆசை கொண்டவர்கள் தன் சாவை விரைவில் எடுத்துகொள்கின்றனர். பறையையும், பறையர்களையும் தீட்டா பார்க்கின்ற சமூகம் நம்மளுடையது, பூர்வகுடிகளை, புதுகுடிகள் ஏறி மிதிப்பது, புதிதல்லவே!. “பறைனா என்னா தெறியுமா!, சும்மா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் அதிரும், அடிவயிறே கலங்கும்”னு பேசுற பலரும் பறையை கத்துக்க முயலுவதில்லை, ஆனா ஆசைனு மட்டும் சொல்லுவோம். கத்துகனும்ன்றது சட்டம் இல்லனாலும் கொஞ்சம் வாசிக்கிறவங்கள மறியாதையா பாக்கலாம். வாழ வாய்ப்பளிக்கலாம் அது போதும.

பறை வாசிப்பவர்களின் வாழ்வு எப்படி போகிறதென்று பார்த்தால் கொடுமையிலும் கொடுமை. அப்பா சேர்த்த சொத்து கிடையாது, தாத்தாவின் நிலம் கிடையாது, அம்மா, பாட்டியிடம் நகை கிடையாது, எதுவுமே கிடையாது, காலாகாலமா வாழ்வியலில் அவர்கள் இருக்க பிடித்து கொண்டது பறையை மட்டுமே, வேறு தொழில்கள் செய்ய அவர்கள் முன்வருவது கிடையாது, வந்தாலும் நாம் ஜெயிக்க விட்டதும் கிடையாது. இருபத்தைந்து வயதில் அவர்களுக்கு திருமணம் நடக்கும், நாற்பதாவது வயதில் அவர்களுக்கு பத்து பதினைந்து வயதில் பிள்ளைகள் இருக்கும், கூடவே சாவை அவசரமாய் அழைக்கும் எல்லா பழக்கங்களும் இருக்கும். வாழ்வு ஒருவகையான அழுத்தத்திலே நகரும், தினமும் குடும்ப சண்டைகள் குழந்தைகளுக்கு நிம்மதியான, உணவையும், உறக்கத்தையும் கூட தராது. எப்படியோ பிள்ளைகள் பள்ளியில் படித்து வருவர், மிதிக்கும் சமூகத்தை கல்வி கொண்டு நகர்த்த முயலும் பருவம், குடும்பம் தரும் பிரச்சனைகளில் சத்தில்லாமல் இருக்கும், பறையடிச்சு சம்பாதிக்கிறதுல பாதிபணம் குடிக்கே போகும், நாற்பது நாற்பத்தைந்தில் அந்த இளைஞன் குடிக்கு பலியாவான், அப்புறம் அப்பா இல்லாத வீடு. அம்மாவின் உழைப்பில்தான் காலத்தை ஓட்டனும், அங்கு சில பிள்ளைகள் மட்டுமே படிப்பை தொடர்கின்றன, பல பிள்ளைகள் மீண்டும் பறை கொட்டவே வருகின்றனர். பதினைந்து வயதில் பறை, இருபது வயதில் எல்லா பழக்கமும், இருபத்தைந்தில் திருமணம், நாற்பத்தைந்தில் மரணம்.

இது ஒரு சைக்கிளாகவே நடந்து வருகிறது, இதற்கு என்ன காரணம்?, டாஸ்மாக்கா?, தனிமனித கட்டுப்பாடின்மையா? சமூகமா? அல்லது அரசா? என பலமுறை யோசித்ததுண்டு. ஒருவேலை பறை மேல் இவர்கள் கொண்ட காதலே காரணமாக இருக்கலாம். ஒரு கலையை மறக்காமல் சந்ததிகள் பல கடந்து கொண்டு வரும் ஒரு சமூகத்துக்கு கிடைக்கிற பரிசு தான் இது. பறையை விடுத்தல் என்பது இவர்களுக்கு சாகுற மாதிரி, உண்மையில் சாகுறதுக்குபதில் இவர்கள் இந்த கலையை விடுத்தலே நன்று. சொல்வது எளிது, செய்வது மிகமிகக்கடினம். பொது சனங்களுக்கு சென்றடையும் கலைகளே மக்களோடு சேர்ந்து நீண்ட நாள் வாழும், மாறாக குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளிருக்கும் அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் ஒதுக்கபட்ட கலைகள் தாம் அழிவது மட்டுமின்றி, மக்களையும் சேர்த்து ஆழிக்கும்.

15 Aug 2015

கொடி தின வாழ்த்துகள்

சட்டைல கொடி குத்திகிட்டு திரியிர எல்லா குழந்தைகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர தினமெல்லாம் அவர்களுக்கு தான்யா. சிவப்பு கலரு மேல வருமா? கீழ வருமா?னு பலருக்கு தெறியாது, தப்பா குத்திட்டு வந்தா காதுல செமயா ஒரு திருகு கிடைக்கும், கூடவே கிடைக்குற அந்த அம்பது பைசா மிட்டாய்க்கு, அம்பது பைசாக்கு கொடி வாங்கி குத்திட்டு போவாங்க. அவங்களுக்கு புக்குல படிச்ச எல்லாருமே சுதந்திர போராட்ட தியாகிகள் தான், நமக்கு அப்படியல்ல நாம யாரயெல்லாம் சுதந்திர போராட்ட தியாகி லிஸ்ட்ல வச்சு இருந்தோமோ அவங்களையெல்லாம் சிலர் விமர்சனம் பன்னுனா, நாமலும் கொஞ்சம் இறங்கி அந்த குரூப் தியாகினு சொல்லுறவங்களையெல்லாம் விமர்சனம் பன்னுவோம்.




தேசப்பற்றுனா அது ஸ்கூல்ல படிக்கிறப்போ தான், உண்மையில் இந்தியானா ஒன்னுதான்னு, எல்லோரும் நம் சகோதர சகோதரிகள்னு நினைக்கிற ஒரு தேசப்பற்று. அது ஒரு உற்சாகமான ஒரு சுதந்திர விடுமுறை தினம். இன்னைக்கு ஃபேஸ்புக், வாட்ஸப்ல “சுதந்திர தின வாழ்த்துகள்” ஃபார்வர்டு பன்னுனாலும் விமர்சனம், பண்ணுலனாலும் விமர்சனம். கூடவே நேத்து ரிலீஸ் ஆன படத்துக்கும் விமர்சனம்.

சுதந்திர தின சிறப்பு திரைப்படம் வேற, ஆனா பசங்க ஜெய்ஹிந்த் படத்த பார்த்த கையோட, காந்தி, பாரதி படம் போட்டா அதையும் பாப்பாங்க, நாம அப்படி இல்ல. சிலருக்கு சுதந்திர தினம் இன்று விடுமுறையில், சிலருக்கு தூக்கத்தில், சிலருக்கு நேத்து ரிலீஸ் ஆன படத்தில், சிலருக்கு சுதந்திர தின சிறப்பு சலுகையில், சிலருக்கு டிவியில், சிலருக்கு குடும்பத்தில், சிலருக்கு கேக்கில், ஆனா ஸ்கூல் பசங்களுக்கு தான் உண்மையில் சட்டைல குத்தின கொடியில சுதந்திர தினம்.

எனிவே, சட்டைல கொடி குத்திகிட்டு திரிஞ்ச, திரியுர எல்லா குழந்தைகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

12 Aug 2015

ஹிந்துஸ்தான்லயா இருக்கோம்!


“நாம ஏன் இங்லிஷ் பேசனும்?”, கார்ப்ரெட்ல இந்த கேள்விக்கெல்லாம் வேலையே கிடையாது. கார்பொரெட் ஒரு குளோபல் கல்ச்சர், அங்க கஸ்டமர் தான் எல்லாம். கஸ்டமர் பொதுவா யூஸ் பன்னுறது ஆங்கிலம், சோ இங்லிஷ்ல தான் எல்லாமும் இருக்கனும். அது குளோபல் மொழியாக ஆக்கப்பட்டுவிட்டது, இத விட்டுவிடுவோம் எப்படியோ சொதப்பி சொதப்பி தங்க்லிஷ்ல ஆரமிச்சு, உடைஞ்ச இங்லிஷ் வழியா, தாய்மொழில யோசிச்சு, கணநேரத்துல இங்லிஷ்க்கு கன்வர்ட் பன்னி பேசி, தாய்மொழி ஸ்லாங்ல இங்லிசஸ் பேசி ஒருவழியா அந்த கல்ச்சருக்கு செட் ஆகிடுவோம். இன்னும் சில பேர் பிரிட்டிஷ் ஸ்டைல்ல, யோசனையே இங்லிஷ்ல வச்சுக்குற அளவுக்கு மாறிடுவாங்க. இதெல்லாம் பெருமை இல்ல கடமை.

அடுத்த மேட்டருக்கு வருவோம் “நாம ஏன் இந்தி பேசனும்?”, இந்த கேள்விக்கெல்லாம் பதிலே கிடையாது. இன்ஸ்டன்ட்டா சில பதில்கேள்விகள் தான் வரும். இந்தியாவுல இந்தி பேசாம எப்புடி?, ஆட்சி மொழியே அதுதானே?, தமிழ்நாட்ட தாண்டுனா எல்லா பக்கமும் இந்தி தானே?, ஹமா ஹிந்துஸ்தான் மெம் ரஹ ரஹெ ஹைம் யார்?. எல்லாத்தையும் விட்டுடுவோம் இதுக்கு பின்னாடி இருக்குற அரசியல் எல்லாம் வேண்டாம், ஒரு காலத்துலயும் தேசியக்கட்சி எதுவும் தமிழ்நாட்டுக்குல்ல இனி வரமுடியாது, வாழ்ந்தாழும், செத்தாலும் அது மாநில கட்சிகள் கூட தான். ஆனாலும் கூட இந்திய திணிக்க அயராது பாடுபடுறவனுங்க இருக்குறப்போ, எந்த பலனும் இல்லாம இந்திய உள்வாங்கி பலிகடாவா ஆகிட்டது ஹைதராபாத்தும், பெங்களூரும் தான். ஆனாலும் கூட சென்னை இன்னமும் சிதையாம இருக்குறது கொஞ்சம் கெத்தாதான் இருக்கு.

ட்ரெயினிங்க் செஷன்ல, பாதி சதவிகிதம் வடஇந்திய ஆட்கள்தான் ட்ரெயினிங் தராங்க, குளோபல் மொழியா ஆங்கிலம் இருக்க, இந்திய திணிக்க அவங்க படுறபாட பாக்க கொஞ்சம் காமெடியாதான் இருக்கு. ஃபுல் ஸ்பீட்ல இங்லிஷ்ல செஷன் போறப்போ இடையிடையே, இந்தி டயலாக்குகளை அள்ளி விடுவாங்க, ஆன எதுக்காக அது பன்னுறாங்கனு தான் புறியல, என் பேட்ஜ்ல பாதி பேருக்கு இந்தி தெறியும், சோ அவங்கள இம்ப்ரஸ் பன்னுறதுக்காக இருந்தா பிரச்சன இல்ல, ஒரு வேளை ட்ரெயினரோட தாய்மொழி ஹிந்தின்றதால, ஒரு ஃப்லோல வந்திருந்தாலும் பிரச்சன இல்ல. இதுதான் காரணமா இருக்கும்னு நினைச்சு இருந்தேன், ஆனா பொறவு தான் விசயம் தெரிய வந்தது,

இந்தி டயலாக் அள்ளி விடுறப்போ நாம மட்டும் தேமேனு இருக்க, இந்தி காரங்க எல்லாம் ஏதோ புரிஞ்சுகிட்டு சிரிப்பாங்க, கூடவே ட்ரெயினரும் சேர்ந்து சிரிப்பாரு ஆனா நாம சலனமே இல்லாம இருப்போம். இது போல இன்னைக்கு ஒரு சம்பவம் நடக்க நாம சவுத் இந்தியர்கள் மட்டும் சலனமே இல்லாம இருக்க, “என்னப்பா இந்தி புறியாம இந்த ஜோக்குக்கு கூட சிரிக்காம இருக்கிங்களேன்ற மாறி அந்த ட்ரெயினி எங்க எல்லாரயும் பாத்தாரு, பாத்தது மட்டும் இல்லாம “தேங்க்ஸ் டு தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஃபார் நாட் அலோவிங்க் யூ ஆல் டு லேர்ன் ஹிந்தி” அப்படின்னாரு. அவரு சொன்னதுல இருக்குற உள்குத்த புறிஞ்சுகிட்டு எல்லாருமே தான் சிரிச்சோம். இப்படி இங்லிஷ்லயே காமெடி பன்னலாம் எல்லோரும் சிரிப்போம். அவரு சொன்னது எங்கல நக்கள் பன்னதான்னாலும், இன்னும் ஹிந்திய உள்ள விடலன்ற கெத்துல தான் அந்த மொக்க டயலாக்குக்கு சிரிச்சோம்.

மொதோ சொன்ன மாதிரி இங்லிஷ்ல பேசுறப்போ ஒரு ஃப்லோல தாய்மொழில பேசியிருந்தா வருத்தம் ஏதும் இல்ல. கூடுதல் விசயம், தமிழ் ட்ரெயினர்களும் இருக்காங்க, எங்க பேட்ஜ்ல கனிசமா தமிழர்களும் இருக்கோம், கூடவே தமிழ்நாட்டுல தான் இருக்கோம், ஆனாலும் ஒரு தமிழ் ட்ரெயினர் கூட செஷன்ல ஃப்லோல கூட தமிழ் யூஸ் பன்னவே இல்லை!.

“ப்ரவுட் டு பீ அ தமிழியன்😉 ”

8 Aug 2015

Abdul Kalam  |  அப்துல் கலாம்




Graphite pencils on papers

Pencils          Steadtler (2B, 4B, 8B) Koh-i-noor(6B, 8B)
Paper            Brustro (200gsm A4)
Duration         4 hours

5 Aug 2015

பென்சிலோடு ஒரு பயணம்




பென்சிலில் கிறுக்காமல் யாராவது பள்ளி பருவத்தை கடந்து வந்திருப்போமாநிச்சயமாக இல்லை. மாங்காகாக்காயானை இப்படி எதையாவது கோடுகளால் வரைவதாய் எண்ணி கிறுக்கி இருப்போம்,இன்று நுன்னிய கிறுக்கல்களால் வரைவது தான் உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் (Hyper-Realistic Pencil Drawings). அது என்ன உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள்இதை பத்தின புரிதல்இதை கலையாகபொழுதாக்கமாகதொழிலாக எடுத்து கொண்டவர்களுக்கு எப்படி தெறியவந்ததுஎல்லாம் ஒரு தேடலில் தான் துவங்கியது.
பொதுவாக சிலர் சொல்லுவதுண்டுஸ்கூல் படிக்கிறப்போ வரைஞ்சதுஅப்புறம் டச்சு விட்டுப்போச்சு,அங்கேதான் நாம் வரைதலை தொலைக்கிறோம். மீண்டும் எப்படி தொலைத்த அந்த வரைதலுடனான அந்த டச்சை மீட்டெடுப்பதுஅதற்குதான் இருக்கிறது கூகுல். கூகுலிடம்Pencil Drawingsஎன்று தேடினால் போதும்அனைத்து தகவல்களையும் கொடுக்கும்அது பத்தவில்லை என்றால் அதுற்குதானே இருக்கிறது ஃபேஸ்புக்கும்மேற்குறிப்பிட்ட அதே வார்த்தையால் ஃபேஸ்புக்கிலும் தேடிப்பாருங்கள்நிறைய பேஜுகளும்குரூப்புகளும் உள்ளனஅவற்றில் பென்சில் ஓவியங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்தும்வரையும் முறை குறித்தும் ஏகப்பட்ட தகவல்கள் உள்ளன. அட அதுவும் பத்தவில்லையாபராவாயில்லை இருக்கவே இருக்கிறது யூடியூப். மற்றும் இனையத்தில் தேடபென்சில் ஓவியங்களுக்கு தேவையான பொருட்களின் பெயர் பின்னால் பகிரப்பட்டுள்ளது. 
தேடிப் பாருங்கள்அனைத்தையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு புரிதலை பெற்ற பின்,அதற்கான மாற்று பொருட்களையும் தாமாகவே சோதித்து பார்க்கவும் முடியும்.
பென்சில் ஓவியங்களை ஒரு காடுன்னு வச்சுக்குவோம். பென்சில்கள் காட்டிலிருக்கும் மரங்கள். வீட்டில் நட்ராஜ் மரம் வளர்க்கும் நம்மில் பலர் காடுகளுக்கு செல்வதில்லை. காட்டினுல் சென்று பார்த்தால் தான் தெறியும் எத்தனை வகையான பென்சில்கள் உள்ளன என்று. பொதுவாக பென்சில் ஓவியத்தை ஒரு ரசிகனா இருந்து பார்த்தாஇரண்டு விமர்சனங்கள் வரலாம்ஒன்றுசூப்பர்இன்னொன்று சான்ஸே இல்லஇத பென்சில்ல பன்னுனதா நம்பவே முடியலஇவை தான் பென்சில் ஓவியத்துக்கும்உயர்-யதார்த்த பென்சில் ஓவியத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி. ஒரு புகைப்படத்தை பிரதி எடுத்தாற்போல் வரைவது தான் உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள்அதுதான் முன்சொன்ன தேடலில்வெகுதூரம் சென்றவர்களின் இலக்கு. அந்த இலக்கை அடையும் வரை ஒவ்வொரு ஓவியத்தையுமே அவர்கள் Experimental Success ஆகவே பார்க்க முடியும்.
அடுத்துமுக்கியமான ஒன்றுவரையும் முறை இங்குதான் சில விசயங்கள் இடிக்கின்றன. பொதுவாக பென்சில் ஓவியங்கள் வரைவதை இரண்டு முறைகளாக பிரிக்கலாம் ஒன்று Freehand drawingமற்றொன்று Grid guidelines drawing. இந்த இரண்டு முறைமைகளையும் தனித்தனியே உபயோகப்படுத்துபவர்கள் உண்டு. முதலாவதுபுகைபடத்தை புறக்கண்ணில் பார்த்துஅகக்கண்ணில் அளவெடுத்து வரைதல். இரண்டாமவதுகட்டம் கட்டி அளவெடுத்துஒவ்வொரு கட்டங்களாக ஓவியத்தை நிறைவு செய்தல். இதில் இரண்டாவது முறைமை பல ஓவியர்களால் கலை வடிவமாக பார்க்கப்படவில்லை மாறாக ஒரு நுனுக்க ஓவியமாகவே பார்க்கப்படுகிறது.அதில் சில நியாயங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு பென்சில் ஓவியனும் ஒரு நுன்கலை வல்லுனறாகவே முயற்சிக்கிறான் என வைத்து கொள்ளலாம்.
ஒரு ஓவியத்தை நிறைவு செய்ய பல shades-களில் உள்ள பென்சில்களை உபயோகப்படுத்துவது அவசியம். அவை தான் ஓவியத்தின் யதார்த்தத்தை உறுதிசெய்கின்றன.
முன்னமே சொன்னாற்போல்சின்ன வயதில் செய்தாற்போல்மாங்காகாக்காயானை என எதை வேண்டுமானாலும் பென்சிலால் யதார்த்தமாக வரைய இயலும். பென்சிலில் வரைவதில் ஒரே ஒரு அளவீடு மட்டுமே உண்டு அது கருப்பு வெள்ளையில் மட்டுமே வரையமுடியும் என்பதே!. வண்ணத்தில் வரையவும் தனியே பலவகை பென்சில்கள் உள்ளன என்றாலும் இங்கு கருப்பு பென்சிலில் மட்டும் பயணிப்போம்.
வகை வகையான பென்சில்களை தவிறஓவியத்தின் யதார்த்த தன்மையை உறுதி செய்வதில் மேலும் பல பொருட்களுக்கும் பங்கு உண்டு அவைகளின் பெயர்கள் ஒரு பார்வைக்கு. மிச்ச விவரங்களுக்கு கூகுல் பன்னவும். Pencils with different shades(Graphite & Charcoal), Wax Pencil, Carpenter’s Flat Pencil, Mechanical Pencil, Woodless Pencils, White Gel Pen, Empty Pen, Paper Stump, Kneaded Eraser, Typewriter Eraser, Electrical Eraser, Battery Sharpeners, Sandpaper Blocks, Cotton, Chamois. இத்தனையும் இருந்தால் மட்டும் வரைஞ்சிட முடியுமா?. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அடுத்து மிக முக்கியமான பொருள் பேப்பர்பென்சில்களை போல பேப்பர்களும் பல வகைகளில் கிடைக்கின்றன அவற்றை தேட உபயோகப்படும் கூகுல் சொற்கள்Paper’s GSM(Grams Per Square Meter) & Paper’s Size. இவை அனைத்தும் ஒரு தகவலாகவே பகிறப்பட்டுள்ளன. உண்மையில்இவற்றின் தன்மைகளையும்எதனோடு எதை சேர்த்து வரைந்தால் எம்மதிறியான தன்மையில் ஓவியங்கள் வெளிவரும் என்பதையும் தெறிந்து கொள்ளசோதித்து தான் பார்க்க வேண்டும். பல பிராண்டுகளும்(Brands) உள்ளன அவற்றையும் சோதித்து பார்க்க வேண்டும். மேலும் அந்த சோதனைகளின் விளைவு அது அவரவர்களின் தனி பானியாக(Unique Style) மாறும்.
ஓவியத்தின் யதார்த்த தன்மைக்காகஒவ்வொரு ஓவியத்துக்கும் நீண்ட நேரம் செலவிட நேரலாம்,அப்படி செய்யும்போது சலிப்பும் ஏற்படலாம். இதனை போக்கஒவ்வொரு ஓவியரும் தனித்துவமான செயல்பாடுகளை செய்கின்றனர் அதாவது ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் வரைதல்ஒரு நேர அளவைக்குல் இவ்வளவு வரைதல்அல்லது தோணும்போது மட்டும் வரைதல்இம்மாதிரியான செயல்கள் தான் அவை.
இன்னொரு ஓவியனின் படைப்புகளோடு ஒப்பிடாமல்ஒரு படைப்பாக மட்டும் தனது ஓவியத்தை பார்த்துமன திருப்தியால் ஒரு இடைவெளியை அந்த ஓவியம்வரைந்தவனுக்கு கொடுக்குமேயாயின்,அதுதான் அந்த பயணத்தின் பாதி நிறைவுஅது முதற்கொண்டு ஓய்வெடுத்து ஓய்வெடுத்து முடிவில்லா பயணத்தை தொடரலாம்.
பொதுவாக பென்சில் ஓவியங்களை மட்டும் தனியாகதன் தொழிலாக யாரும் எடுப்பது இல்லை,மாறாகசிலர் நிறைய ஓவிய முறைகளோடு இதனையும் வரைபவர்களாக இருப்பார்கள்அல்லது,ஓவியத்திற்கு துளியும் சம்பந்தமில்லத துறையில் இருந்து கொண்டு இதை பொழுதாக்கமாக வரைபவர்களாக இருப்பார்கள். நாம வரையற ஓவியம் இன்னொருத்தரை ஈர்க்கும் போது தான்,நம்மிடம்வரைந்து தருமாறு கேட்பார்கள்அப்போதுதான் அது தொழிலாக மாறுகிறது. பொதுவாக வாய் வழி தான் (Word of Mouth) பென்சில் ஓவியங்களுக்கு சந்தை பரவியது. இப்போது ஃபேஸ்புக் பேஜுகள் வழியேவும் சந்தைகள் வளர்ந்துள்ளன.
எத்தனையோ ஓவிய முறைகள் இருந்தாலும்பென்சிலில் முகங்களை வரைந்து பரிசளிப்பது தான் இங்கு அதிகம் பரவி வருகிறது. காரணம் பண செலவு குறைவுஎளிதில் அனுகும் முறையில் பென்சில் ஓவியர்கள்/வல்லுனர்கள் இருப்பது. இவை இரண்டு மட்டுமல்லாமல் முழுமுதற்காரணமாய் இருப்பது மனித மனமும் தான். ஒரு அழகான இயற்கை காட்சி ஓவியம்மற்றொன்று அழகான(!) நம் முகத்தின் ஓவியம் இதில் எதை நம் மனம் விரும்பும்இதற்கான பதிலில் தான் உள்ளது பென்சில் ஓவியங்களுக்கு உண்டாகிவரும் சந்தை.
இறுதியாக ஒரு ஓவியத்துக்கு எவ்வளவு சன்மானம் வாங்குவது என்பதில் தான் ஓவியர்களுக்கு ஒரு பெரிய சங்கடமே உள்ளதுவிலை நிர்ணயத்தலில் பல அனுகுமுறைகள் உள்ளனயார் வரைந்தது?,என்ன அளவில் வரைந்தது?, எவ்வளவு நேரத்தில் வரைந்ததுஇப்படி பல காரணிகள் இருந்தாலும்அந்த ஓவியம் எவ்வளவு அழகாக’ உள்ளது என்பதனைக்கொண்டு விலையை கொடுக்க வரையச்சொல்லி கேட்டவர் முன்வருவாரேயாயின் அதுவே தக்க சன்மானமாக இருக்கு முடியும்.

-நாகா via அகம் மின்னிதழ்