14 Jun 2017

ஆர்.எஸ்.எஸ் ஜந்துக்கள்

பத்து வயது பையன் ஒருத்தன் அறுபது வயதுடைய பெட்டிக்கடை காரரிடம் இவ்வாறாக கேட்கிறான் "தாத்தா எனக்கு இது கொடுங்க!", அதுக்கு அவரிடமிருந்து இவ்வாறா பதில் வருவதா வச்சிக்குவோம் "ஏய், உங்கப்பன் எனக்கு பொறந்தானா? இல்ல உங்கம்மா எனக்கு பொறந்தாளா? ஒழுங்கா என்ன வேணுமோ அதமட்டும் கேளு!", இவை போதும் அந்தப்பையனின் எண்ணங்களை சிதைக்க.

நான் காலேஜ் படிக்கும்போது, ஊரில் யோகா மற்றும் சிலம்பம் சொல்லித்தரும் மாஸ்டராக 'ஜி' என்கிற பெயரில் சில ஆர்.எஸ்.எஸ் ஜந்துக்கள் இருந்தன. சிலம்பம் & யோகா கற்க வரும் சிறுவர்களிடத்தில் 'இந்தியா நம் பாரதமாதா, நம் தாய் வழியில் பிறக்காத முஸ்லிம்கள் இங்கே வாழ்வதும் அவர்களோடு நாம் வாழ்வதும் அறுவருக்கத்தக்கது'ன்ற ரேஞ்சில் உளரல்களை அள்ளித்தெளித்து வந்தனர். என்னிடமே ஒருமுறை 'தம்பி எந்த காலேஜ்?' என ஒரு ஜந்து கேட்க நான் 'ஜமால்' என்றேன், 'ஏன் தம்பி போயும் போயும் அவிங்க காலேஜ் தானா கெடச்சுது'னு அடுத்த கேள்வி கேட்க 'ஆமா அல்கொய்தால சேரலாம்னு இருக்கேன் அதான் அங்க படிக்கிறேன்'னு சொல்ல நெனச்சும் சொல்ல முடியாம 'ஆமா அங்க தான் சீட் கொடுத்தாங்க'னு சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

இன்றைய சினாரியோக்கு வருகிறேன், கூட படிச்ச சில நண்பர்கள் இதுபோன்ற ஜந்துக்களால் இன்று முழுநேர தேசபக்திப்பதர்களாக மாறி நிட்கிறார்கள், அவர்களிடத்தில் எந்த விதத்திலும் வாதம் செய்ய இயலாது, அவ்வாறாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் பக்குவப்பட்டிருந்த அவர்களுக்கே இந்த நிலையானால் என் கவலையெல்லாம் அன்று யோகாவும் சிலம்பமும் கற்கச்சென்ற சிறுவர்களை எண்ணித்தான்.