28 Oct 2015

அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு?



கொஞ்ச நாளுக்கு முன்னால் "நயன்தாரா செய்தது தவறாகவே இருக்கட்டும்..நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" அப்படின்னு சமஸ் எழுதின ஒரு கட்டுரையில், சிறுதெய்வ வழிபாடுகளை அழித்து பெருதெய்வ கோயில்களும், புதுபுது கோயில் கட்டிட பாணிகளும், தமிழக கடைகோடி ஊர்களில் முளைத்து வரும் இந்த புதிய கலாச்சாரத்தை கால மாற்றத்தின் தொடர்ச்சியாக பார்ப்பதா? இல்லை சங் பரிவார அமைப்புகளின் சல்லிவேர்கள் பரவுவதாக பார்ப்பதா? என ஐயம் வெளியிட்டிருந்தார். அதற்கு முன் காய்ன் கலெக்சன் குறித்தும் அதிலுள்ள போலி சந்தை மற்றும் பழம்பொருள் சேகரிப்பு மோகம் குறித்து நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன். இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்பது இந்த படங்களை பார்த்தால் சிறிது விளங்கும், நான் இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன்,

  ‘அனுமன் படம் பதித்த அரிய கிழக்கிந்திய கம்பெனி காசு' என்ற ஒன்றை பேஸ்புக்கில் ஒரு நியூமிஸ்மேட்டிக் குழுவில் பார்த்தேன், விலை ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று இருந்தது. அந்த அரியவகை காசுக்கு இந்த விலை கம்மிதான். கிழக்கிந்திய கம்பெனி காசுகள் குறித்து ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்ததால் சந்தேகமாக இருக்க தேடிப்பார்த்தேன், எனக்கு தெறிந்து எம்பெரர்களையும், ராஜ குடும்ப ஆட்களையும் கம்பெனி காசுகளில் பதித்த பெருமை பீத்தகரையன்கள்தான் அவர்கள் ஆனால், இந்தியாவில் இந்து கடவுள்களின் உருவங்களை பதித்து வெளியிடும் அளவுக்கு மூடர்கள் அல்லர்.

அந்த காலத்தில், சில கோவில் நிர்வாகங்கள், ‘கோவில் டோக்கன்-Temple Token' என்று ஒன்றை வைத்திருந்திருக்கின்றனர், தனியே டோக்கன் அடிக்க சோம்பேரித்தனமோ என்னமோ கிழக்கிந்திய கம்பெனி காசுகளை உருமாற்றம் செய்து உபயோகித்துள்ளனர், விருப்பம் போல வருடத்தையும் பதித்து உபயோகித்துள்ளனர், பெரும்பாலும் காசின் ஒரு பக்கத்தை மட்டும் மாற்றியமைத்து, அந்த பக்கத்தில் கடவுள் உருவங்களை பதித்து உபயோகித்துள்ளனர். ஆக மறுபக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் பெயர் இருக்கும். இதையே இப்போது, கிழக்கிந்திய கம்பெனியே இந்து கடவுளின் உருவங்களை பதித்து வெளியிட்டது எனவும், மிகவும் அரிதான காசு எனவும், சில வட இந்திய குழுக்கள் பகிர்ந்து வருகின்றனர். இதை வெறும் 'போலி சந்தை புரளி' என எடுத்துகொள்வதா? இல்லை காவி கும்பலின் சித்து விளையாட்டு என எடுத்து கொள்வதா? என விளங்கவில்லை. தெரிந்தே சிலர் இந்த டோகன்களை கிழக்கிந்திய கம்பெனியே வெளியிட்டது போல பதிவு செய்துவருவது சற்று அச்சமாகவே உள்ளது. ஏனென்றால் இது போன்ற டோக்கன்கள், 'பூஜை காசுகள்-Pooja coins' என்ற பெயரில் இன்றளவும் வாரணாசி, காசி போன்ற ஊர்களின் கோயில் தெருக்களின் கடைகளில் கிடைக்கின்றன, அதை புனித பொருளாக எண்ணி பூஜை செய்து பலர் பூஜை அறையிலும் வைத்து வருகின்றனர்.

ஆக இது போன்ற போலித்தனமான செய்திகளை, வெறும் பணம் சம்பாதிப்பதற்காக பதிவு செய்கிறார்கள் என எடுத்துகொள்ள முடியவில்லை, அதிலும் அண்மைகாலமாக, காவி கும்பல்களின் செய்கைகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையிலேயே உள்ளன. இதிலிருந்து இந்துத்துவ பெருமை பீத்தகரையர்கள் இன்னும் எதையெல்லாம் எடுத்து விளையாட போகிறார்கள் என அச்சமாவே உள்ளது. சமஸ் பதிவு செய்திருந்த அவரின் நண்பர் ஒருவரின் ஐயம், இன்னும் அதிர்ச்சியை கொடுத்தது, அதாவாது சமீபகால சாய் பாபா உருவசிலைகள் இப்போது மோடி போல இருக்கிறதாம்!

20 Oct 2015

ஆடோ ஆஃப் - அமானுஷ்யம்



இரவு ஏழு மணி, அம்மா அருகிலிருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு போயிருந்தார்கள், வீட்டில் அந்த சிறுவன் மட்டும் தனியே இருக்கிறான். புது கலர் டிவி வாங்கி ஓரிரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனுக்கு கதவு வைத்த அந்த பழைய டிவி தான் பிடிக்கும் என்றாலும், இந்த புது டிவியின் கலரும், ரிமோட்டும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, ரொம்ப நேரம் டிவி ரிமோட்டின் மெனுக்களை ஆராய்ந்தவாரே இருந்தவனுக்கு 'கார்ட்டூன் பார்க்கணும், அம்மா வந்தா அப்புறம் ஒரே சீரியல் தான்' என ஞானோதையம் வர கார்ட்டூன் சேனல் மாத்தி பார்க்க ஆரம்பித்தான். 

மெத்தை கட்டிலில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான், அவன் முன்னே கட்டிலில் ரிமோட் இருந்தது, டிவி சத்தத்தை தவிற வீட்டில் வேறெந்த சப்தமும் இல்லை. ஆர்வமாய் பார்த்து கொண்டிருக்கையில் திடீரென டிவி ஆஃப் ஆனது, ஃபேனும், லைட்டும் ஆனிலேயே இருக்கின்றன, கரண்டும் போகவில்லை, ரிமோட்டும் கையிலில்லை, ஆக தவறுதலாக ஆஃப் ஆகவும் வழியில்லை. இப்போது ஃபேன் சத்தத்தை தவிற தெருவிலேவையே வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. ஒருகணம் திகைத்து போனான்.

ஃபேனின் சப்தமும், தெருவின் நிசப்தமும், அவனுக்கு பயத்தை வரவழைத்தன. ஏதோ பேயி'தான் டிவியை ஆஃப் செய்திருக்கும் என யோசித்த மறுகணம் அந்த வீட்டிலிருக்க அவனால் முடியவில்லை, பூட்டை எடுத்து வீட்டை பூட்டி, முழு வேகத்தில் அம்மாச்சி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தான். அங்கு சென்றதும்தான், தான் மூச்சு விட்டுக்கொண்டிருப்பதையும், தன் இதையும் துடிப்பதையுமே அவனால் உணர முடிந்தது.

அமானுஷ்ய அனுபவத்தால் தன் வீட்டில் பேய் இருப்பதை உணர்ந்தபோது அவனுக்கு வயது பன்னிரண்டு.

புது கலர் டிவி ரிமோட்டில் 'ஆட்டோ ஆஃப்' மெனு உள்ளதை உணர்ந்தபோது அவனுக்கு வயது பதிமூன்று.

15 Oct 2015

The Art of Handshaking




ஒரு கலாச்சாரத்தில் புனிதமாவோ, சடங்காவோ, வீரமாவோ, அன்பாவோ பார்க்கப்படுற சில பழக்கவழக்கங்கள், வேறு ஒரு கலாச்சார மக்களிடையே தவறாவும், அசிங்கமாவும் ஏன் அறுவருப்பாகவும்கூட பார்க்கப்படும் என்பது அறிந்ததே, இந்த ஸ்கூல்ல, காலெஜ்ல, அப்புறம் வேலை பாக்குற இடத்தில் என எல்லா இடத்திலும், இன்னொருத்தர்கிட்ட எப்படி கைகுழுக்குவது என க்ளாஸ் மேல க்ளாஸ் எடுத்துவிட்டனர். அதிலும் கை கொடுத்தலில் இருக்கும் “Body Language” மற்றும் “The Art of Handshaking” என உளவியல் சார்ந்த தியரிகள் வேறு, தியரிகளின் உண்மை தன்மையில் அய்யமேதுமில்லை, ஆனாலும் கை கொடுத்தல் பல நேரங்களில் அசௌகர்யத்தையே கொடுக்கும். உண்மையில் அந்த உளவியல் தியரிகள் கூட காரணமாக இருக்கலாம். ஆக பல சமயங்களில் நண்பர்களிடையே விளையாட்டாய் சிரித்து கொண்டே அரசியல்வாதி போல் கும்பிடு போடுவதும் உண்டு, பதிலுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சிரிப்போடு கும்பிடு வரும், அதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்யும்.

நாம கும்புடு போடுவது, கை குழுக்கும் சமூகத்துக்கு காமெடியாக தெறியலாம், ஆனால் நமக்கு கை குழுக்குவது காமெடியாக தெறியாது, அதிலொரு ப்ரொஃபசனிலிஸ்ம் தான் நமக்கு தெறியும், ஆகவே தான் இங்கு இதை பதிய விளைகிறேன், தொன்னூறுகளுக்கு முன்பு வரை பல கை குழுக்கும் சமூகங்கள் தங்களுக்குள் சில ஒப்பந்தங்கள்(deal) செய்து கொள்ளும் போது கையில் எச்சில் துப்பி கை குழுக்கி கொள்ளும் முறையை வைத்திருந்தன, தற்போது அவற்றை பின்பற்றுவது இல்லை, அதற்கு காரணமொன்று தனியே தேவையில்லை.

சாதாரணமாக கை குழுக்கும் போதே ஏகப்பட்ட கிருமிகள் பரவுகின்றன என்று பல ஆய்வுகள் சொல்கின்றன, மேலும் கண்ட இடங்களில் கையை வைத்து பின் எதிரிக்கு கை கொடுத்து பழிவாங்கும் பல சீன்களும் ஹாலிவுட் படங்களில் பார்த்தது உண்டு, ஆக நமக்குள் நாம் கை குழுக்கிக்கொள்ளும் போது இது போன்ற பல சீன்கள் கண் முன்னே வந்து போகும்.

14 Oct 2015

'C O U R T' Movie Poster  |  'கோர்ட்' திரைப்பட சுவரொட்டி



Ballpoint Pen on papers


Pen              Nataraj Gelix(0.5mm)
Paper           Brustro (200gsm A4)
Duration       1.5 hours

12 Oct 2015


Manorama  |  மனோரமா




Ballpoint Pen on papers


Pen              Nataraj Gelix(0.5mm)
Paper           Brustro (200gsm A4)
Duration       0.5 hour

9 Oct 2015

தூக்கம் பறித்த வார்த்தைகள்

அவனுக்கு எட்டு மணிக்குதான் தினமும் பஸ். ஆஃபீஸ் முடிந்து ஏழு நாற்பதுக்கு அருகிலிருக்கும் பேருந்துநிருத்தத்திற்கு சென்று காத்திருப்பது வழக்கம். காத்திருப்பது என்றால் பேருந்துநிருத்தத்தின் நீண்ட இருக்கைகளில் அமர்ந்திருப்பது அல்ல, தினமும் நிற்கவே செய்வான். அது ஒரு நீளமான பேருந்துநிருத்தம், நான்கைந்து நீண்ட இருக்கைகள் இருக்கும் என்றாலும் யாராவது ஒருவராவது அவைகளில் அமர்ந்திருப்பர். அவனுக்கு தனியே அமர்வதுதான் இஷ்டம் என்பதால், ஒருநாளும் அவற்றில் அமர்ந்தது இல்லை.

அன்று ஏனோ சீக்கிரம் வேலைகள் முடிய ஏழு இருபதிற்கே வந்துவிட்டான், ஒரு நீண்ட இருக்கை மட்டும் ஆளின்றியிருக்க, மீதமணைத்திலும் ஓரிருவர் அமர்ந்திருந்தனர். பேருந்திற்கு வெகுநேர காத்திருக்க வேண்டுமென்பதால் சென்று அமர்ந்தான். பேருந்து நிருத்தத்திற்கே உண்டான அழுக்கு துணி உடுத்திய தாடி மழிக்காத உருவம் கொண்ட ஒருவர் அவனருகே வந்து நிற்பதை கவணித்துகொண்டு கையிலிருந்த ஃபோனை நோண்ட ஆரம்பித்தான். கண நேரத்தில், மெலிந்த குரலில் “கொஞ்சம் அங்க போயி வுட்க்காருப்பா!” என்றார் அவர். அவன் கவணிக்காததுபோல் இருந்தான். அப்படி அவன் கவணிக்காதபடி அமர்ந்திருந்தது அவனின் அன்றைய தூக்கத்தை பறிக்கப்போகிறது என்பது அப்போது அவனுக்கு தெறியாது.

ஒரே நிமிடம்தான்... கேட்டதை வாங்கிதறாத பெற்றோரிடம் கத்தும் குழந்தை போல சத்தமாக கத்த ஆரம்பித்துவிட்டார், “படுக்க சீட்டுதானே கேட்டேன், உங்களுக்கெல்லாம் வீடு இருக்கு, வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு காத்திருக்கிங்க, எனக்கெல்லாம் என்ன இருக்கு, நான் என்ன வீடு கட்ட காசு கேட்டேனா, இல்ல சோத்துக்குதான் காசு கேட்டேனா! நகந்துபோககோட மாட்டேன்றிங்க”னு கத்திக்கொண்டே தரையில் படுத்து, வைத்திருந்த துணியால் போற்றிக்கொண்டார். சுற்றியிருக்கும் அனைவரின் கண்களும் அவனை வித்தியாசமாக பார்க்க, சட்டென எழுந்து அடுத்த பேருந்துநிருத்தத்திற்க்கு நடக்க தொடங்கினான்.

அங்கிருந்தவர்களெல்லாம் செல்லும் வரை, அவர் கத்தின வார்த்தைகள் அந்த நீண்ட இருக்கையில் சாவகாசமாய் படுத்துக்கொண்டது.