5 Aug 2015

பென்சிலோடு ஒரு பயணம்




பென்சிலில் கிறுக்காமல் யாராவது பள்ளி பருவத்தை கடந்து வந்திருப்போமாநிச்சயமாக இல்லை. மாங்காகாக்காயானை இப்படி எதையாவது கோடுகளால் வரைவதாய் எண்ணி கிறுக்கி இருப்போம்,இன்று நுன்னிய கிறுக்கல்களால் வரைவது தான் உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள் (Hyper-Realistic Pencil Drawings). அது என்ன உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள்இதை பத்தின புரிதல்இதை கலையாகபொழுதாக்கமாகதொழிலாக எடுத்து கொண்டவர்களுக்கு எப்படி தெறியவந்ததுஎல்லாம் ஒரு தேடலில் தான் துவங்கியது.
பொதுவாக சிலர் சொல்லுவதுண்டுஸ்கூல் படிக்கிறப்போ வரைஞ்சதுஅப்புறம் டச்சு விட்டுப்போச்சு,அங்கேதான் நாம் வரைதலை தொலைக்கிறோம். மீண்டும் எப்படி தொலைத்த அந்த வரைதலுடனான அந்த டச்சை மீட்டெடுப்பதுஅதற்குதான் இருக்கிறது கூகுல். கூகுலிடம்Pencil Drawingsஎன்று தேடினால் போதும்அனைத்து தகவல்களையும் கொடுக்கும்அது பத்தவில்லை என்றால் அதுற்குதானே இருக்கிறது ஃபேஸ்புக்கும்மேற்குறிப்பிட்ட அதே வார்த்தையால் ஃபேஸ்புக்கிலும் தேடிப்பாருங்கள்நிறைய பேஜுகளும்குரூப்புகளும் உள்ளனஅவற்றில் பென்சில் ஓவியங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்தும்வரையும் முறை குறித்தும் ஏகப்பட்ட தகவல்கள் உள்ளன. அட அதுவும் பத்தவில்லையாபராவாயில்லை இருக்கவே இருக்கிறது யூடியூப். மற்றும் இனையத்தில் தேடபென்சில் ஓவியங்களுக்கு தேவையான பொருட்களின் பெயர் பின்னால் பகிரப்பட்டுள்ளது. 
தேடிப் பாருங்கள்அனைத்தையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு புரிதலை பெற்ற பின்,அதற்கான மாற்று பொருட்களையும் தாமாகவே சோதித்து பார்க்கவும் முடியும்.
பென்சில் ஓவியங்களை ஒரு காடுன்னு வச்சுக்குவோம். பென்சில்கள் காட்டிலிருக்கும் மரங்கள். வீட்டில் நட்ராஜ் மரம் வளர்க்கும் நம்மில் பலர் காடுகளுக்கு செல்வதில்லை. காட்டினுல் சென்று பார்த்தால் தான் தெறியும் எத்தனை வகையான பென்சில்கள் உள்ளன என்று. பொதுவாக பென்சில் ஓவியத்தை ஒரு ரசிகனா இருந்து பார்த்தாஇரண்டு விமர்சனங்கள் வரலாம்ஒன்றுசூப்பர்இன்னொன்று சான்ஸே இல்லஇத பென்சில்ல பன்னுனதா நம்பவே முடியலஇவை தான் பென்சில் ஓவியத்துக்கும்உயர்-யதார்த்த பென்சில் ஓவியத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி. ஒரு புகைப்படத்தை பிரதி எடுத்தாற்போல் வரைவது தான் உயர்-யதார்த்த பென்சில் ஓவியங்கள்அதுதான் முன்சொன்ன தேடலில்வெகுதூரம் சென்றவர்களின் இலக்கு. அந்த இலக்கை அடையும் வரை ஒவ்வொரு ஓவியத்தையுமே அவர்கள் Experimental Success ஆகவே பார்க்க முடியும்.
அடுத்துமுக்கியமான ஒன்றுவரையும் முறை இங்குதான் சில விசயங்கள் இடிக்கின்றன. பொதுவாக பென்சில் ஓவியங்கள் வரைவதை இரண்டு முறைகளாக பிரிக்கலாம் ஒன்று Freehand drawingமற்றொன்று Grid guidelines drawing. இந்த இரண்டு முறைமைகளையும் தனித்தனியே உபயோகப்படுத்துபவர்கள் உண்டு. முதலாவதுபுகைபடத்தை புறக்கண்ணில் பார்த்துஅகக்கண்ணில் அளவெடுத்து வரைதல். இரண்டாமவதுகட்டம் கட்டி அளவெடுத்துஒவ்வொரு கட்டங்களாக ஓவியத்தை நிறைவு செய்தல். இதில் இரண்டாவது முறைமை பல ஓவியர்களால் கலை வடிவமாக பார்க்கப்படவில்லை மாறாக ஒரு நுனுக்க ஓவியமாகவே பார்க்கப்படுகிறது.அதில் சில நியாயங்கள் உண்டு என்பதால் ஒவ்வொரு பென்சில் ஓவியனும் ஒரு நுன்கலை வல்லுனறாகவே முயற்சிக்கிறான் என வைத்து கொள்ளலாம்.
ஒரு ஓவியத்தை நிறைவு செய்ய பல shades-களில் உள்ள பென்சில்களை உபயோகப்படுத்துவது அவசியம். அவை தான் ஓவியத்தின் யதார்த்தத்தை உறுதிசெய்கின்றன.
முன்னமே சொன்னாற்போல்சின்ன வயதில் செய்தாற்போல்மாங்காகாக்காயானை என எதை வேண்டுமானாலும் பென்சிலால் யதார்த்தமாக வரைய இயலும். பென்சிலில் வரைவதில் ஒரே ஒரு அளவீடு மட்டுமே உண்டு அது கருப்பு வெள்ளையில் மட்டுமே வரையமுடியும் என்பதே!. வண்ணத்தில் வரையவும் தனியே பலவகை பென்சில்கள் உள்ளன என்றாலும் இங்கு கருப்பு பென்சிலில் மட்டும் பயணிப்போம்.
வகை வகையான பென்சில்களை தவிறஓவியத்தின் யதார்த்த தன்மையை உறுதி செய்வதில் மேலும் பல பொருட்களுக்கும் பங்கு உண்டு அவைகளின் பெயர்கள் ஒரு பார்வைக்கு. மிச்ச விவரங்களுக்கு கூகுல் பன்னவும். Pencils with different shades(Graphite & Charcoal), Wax Pencil, Carpenter’s Flat Pencil, Mechanical Pencil, Woodless Pencils, White Gel Pen, Empty Pen, Paper Stump, Kneaded Eraser, Typewriter Eraser, Electrical Eraser, Battery Sharpeners, Sandpaper Blocks, Cotton, Chamois. இத்தனையும் இருந்தால் மட்டும் வரைஞ்சிட முடியுமா?. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அடுத்து மிக முக்கியமான பொருள் பேப்பர்பென்சில்களை போல பேப்பர்களும் பல வகைகளில் கிடைக்கின்றன அவற்றை தேட உபயோகப்படும் கூகுல் சொற்கள்Paper’s GSM(Grams Per Square Meter) & Paper’s Size. இவை அனைத்தும் ஒரு தகவலாகவே பகிறப்பட்டுள்ளன. உண்மையில்இவற்றின் தன்மைகளையும்எதனோடு எதை சேர்த்து வரைந்தால் எம்மதிறியான தன்மையில் ஓவியங்கள் வெளிவரும் என்பதையும் தெறிந்து கொள்ளசோதித்து தான் பார்க்க வேண்டும். பல பிராண்டுகளும்(Brands) உள்ளன அவற்றையும் சோதித்து பார்க்க வேண்டும். மேலும் அந்த சோதனைகளின் விளைவு அது அவரவர்களின் தனி பானியாக(Unique Style) மாறும்.
ஓவியத்தின் யதார்த்த தன்மைக்காகஒவ்வொரு ஓவியத்துக்கும் நீண்ட நேரம் செலவிட நேரலாம்,அப்படி செய்யும்போது சலிப்பும் ஏற்படலாம். இதனை போக்கஒவ்வொரு ஓவியரும் தனித்துவமான செயல்பாடுகளை செய்கின்றனர் அதாவது ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் வரைதல்ஒரு நேர அளவைக்குல் இவ்வளவு வரைதல்அல்லது தோணும்போது மட்டும் வரைதல்இம்மாதிரியான செயல்கள் தான் அவை.
இன்னொரு ஓவியனின் படைப்புகளோடு ஒப்பிடாமல்ஒரு படைப்பாக மட்டும் தனது ஓவியத்தை பார்த்துமன திருப்தியால் ஒரு இடைவெளியை அந்த ஓவியம்வரைந்தவனுக்கு கொடுக்குமேயாயின்,அதுதான் அந்த பயணத்தின் பாதி நிறைவுஅது முதற்கொண்டு ஓய்வெடுத்து ஓய்வெடுத்து முடிவில்லா பயணத்தை தொடரலாம்.
பொதுவாக பென்சில் ஓவியங்களை மட்டும் தனியாகதன் தொழிலாக யாரும் எடுப்பது இல்லை,மாறாகசிலர் நிறைய ஓவிய முறைகளோடு இதனையும் வரைபவர்களாக இருப்பார்கள்அல்லது,ஓவியத்திற்கு துளியும் சம்பந்தமில்லத துறையில் இருந்து கொண்டு இதை பொழுதாக்கமாக வரைபவர்களாக இருப்பார்கள். நாம வரையற ஓவியம் இன்னொருத்தரை ஈர்க்கும் போது தான்,நம்மிடம்வரைந்து தருமாறு கேட்பார்கள்அப்போதுதான் அது தொழிலாக மாறுகிறது. பொதுவாக வாய் வழி தான் (Word of Mouth) பென்சில் ஓவியங்களுக்கு சந்தை பரவியது. இப்போது ஃபேஸ்புக் பேஜுகள் வழியேவும் சந்தைகள் வளர்ந்துள்ளன.
எத்தனையோ ஓவிய முறைகள் இருந்தாலும்பென்சிலில் முகங்களை வரைந்து பரிசளிப்பது தான் இங்கு அதிகம் பரவி வருகிறது. காரணம் பண செலவு குறைவுஎளிதில் அனுகும் முறையில் பென்சில் ஓவியர்கள்/வல்லுனர்கள் இருப்பது. இவை இரண்டு மட்டுமல்லாமல் முழுமுதற்காரணமாய் இருப்பது மனித மனமும் தான். ஒரு அழகான இயற்கை காட்சி ஓவியம்மற்றொன்று அழகான(!) நம் முகத்தின் ஓவியம் இதில் எதை நம் மனம் விரும்பும்இதற்கான பதிலில் தான் உள்ளது பென்சில் ஓவியங்களுக்கு உண்டாகிவரும் சந்தை.
இறுதியாக ஒரு ஓவியத்துக்கு எவ்வளவு சன்மானம் வாங்குவது என்பதில் தான் ஓவியர்களுக்கு ஒரு பெரிய சங்கடமே உள்ளதுவிலை நிர்ணயத்தலில் பல அனுகுமுறைகள் உள்ளனயார் வரைந்தது?,என்ன அளவில் வரைந்தது?, எவ்வளவு நேரத்தில் வரைந்ததுஇப்படி பல காரணிகள் இருந்தாலும்அந்த ஓவியம் எவ்வளவு அழகாக’ உள்ளது என்பதனைக்கொண்டு விலையை கொடுக்க வரையச்சொல்லி கேட்டவர் முன்வருவாரேயாயின் அதுவே தக்க சன்மானமாக இருக்கு முடியும்.

-நாகா via அகம் மின்னிதழ்

2 comments: