29 Jan 2017

பாஷா, மாணிக் பாஷா - காந்தி, மகாத்மா காந்தி


காந்தி ஒரு சிறையின் அறையில் பூட்டப்பட்டு கிடக்கிறார், ஒரு சமயம் பிரிட்டிஷ் காவலன் ஒருவனால் பூட்ஸ் காலாலேயே மிதிக்கப்பட்டு, "எலும்பும் தோலுமா இருந்துகிட்டு பிரிட்டிஷ் காரர்களையே எதிர்க்கிறாயா கிழவா! இங்கயே உன்ன கொன்னு போட்டாக்கூட கேக்க ஆள் கிடையாது!" அப்படினு மிரட்டப்படுகிறார்.

உடனே காந்தி, "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்" என்று அவனிடம் சொல்கிறார், வெளியே பல லட்சம் பேர் காந்திக்காக காத்திருப்பதை கண்டு மிரண்டு போகிறான் அந்த பிரிட்டிஷ் காவலன்.

இது சின்ன வயசுல எங்க அம்மாச்சி காந்தி பத்தி எனக்கு சொன்ன கதைகள்ல ஒன்னு. அதுசமயம்தான் பாஷா படம் ஊர்ல இருந்த பஞ்சாயத்து டிவி'ல பாத்திருந்ததால "கொஞ்சம் அப்டியே ஜன்னலுக்கு வெளியே பார்"னு காந்தி சொன்னதா எங்க அம்மாச்சி சொன்னப்போவெல்லாம், ரஜினி பாஷா படத்துல கூலர கழட்டிட்டு ரகுவரன்கிட்ட "கொஞ்சம் அங்கே பாரு கண்ணா"னு சொல்லிட்டு 'பாஷா, மாணிக் பாஷா'னு சொல்லுவார் இல்லையா அந்தமாதிரி காந்தியும் 'காந்தி, மகாத்மா காந்தி'னு சொல்லியிருப்பாரோன்னு கற்பனைஎல்லாம் பண்ணி வச்சிருந்தேன். கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறமாதான் இந்த சமூகம், அவரு பேரு 'மகாத்மா காந்தி' இல்ல 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'னு சொல்லி என் கற்பனையவெல்லாம் உடைச்சிருச்சு!

No comments:

Post a Comment