11 Jan 2016

நிதர்சனம்


வாழ்வின் நிதர்சனத்தை எண்ணி வானத்தையே பார்த்துகொண்டிருந்தான் அவன். நீலவானமும், உஷ்ணம் பீய்ச்சும் சூரியனும், வெண்மேகமும், இடம்பெயரும் பறவைகளும் தெரியுமென நினைத்திருப்பான் போலும் ஆனால் கண்களின் மேல் தெரிந்ததென்னவோ மிதக்கும் சில வஸ்துகள் தான். ஒன்றையாவது சற்று நிறுத்தி பார்த்துவிடலாம் என ஒவ்வொரு முறை எத்தனிக்கையிலும் வஸ்து அங்குமிங்கும் நகர்ந்துகொண்டேயிருந்தது.

வஸ்துவின் மேலிருந்த கவனம் விலகி சலிப்புதட்டியபின், எவையெல்லாம் தெரியுமென நினைத்தானோ அவையெல்லாம் தெரிய ஆரம்பித்தது. நிதர்சனமென்பது யாதென அப்போதுதான் புரிந்தது அவனுக்கு.

நிதர்சனமென்பது பார்வைதான்!

No comments:

Post a Comment