30 May 2016

என் நல்லூர்கள்

எனக்கு நல்லூர்கள் ரெண்டு உண்டு. ஒன்னு சிங்காநல்லூர், இன்னொன்னு சோழிங்கநல்லூர். நாலு வருஷம் முன்னால கோவைல காலேஜ் ஜாயின் பண்ணினதுக்கப்புறம், திருச்சியிலருந்து கிளம்புனா அடுத்து கோயம்புத்தூர்ல கால் வைக்குற இடம் சிங்காநல்லூர்தான், பிறகு அங்க இருந்து பஸ் புடிச்சாதான் காலேஜ். அப்புறம் வீக்கெண்டுல கொறஞ்ச காசுல, செம்ம திருப்தியா சாப்புட போற இடமான 'சாந்தி கியர்ஸ் கேண்டீன்' இருக்றதும் சிங்காநல்லூர்தான். ஆக அப்போவெல்லாம் பஸ்ஸுல ஏறி வாயத்தொறந்தா மொதல்ல வர்ற பேரு சிங்காநல்லூராதான் இருந்தது.
அதுபோலவே இங்க சென்னை வந்தப்புறம் ட்ரெயினிங்க்கு ஜாயின் பண்ணின இடம் சோழிங்கநல்லூர். சோ இங்க வந்தப்புறம் முதல் ஒரு மாசம் டெய்லி ஆஃபிஸ் போக பஸ் ஏறி 'சிங்காநல்லூர் டிக்கெட் ஒன்னு கொடுங்க'ன்னு பல முறை கேட்டு பிறகு திருத்திக்கேட்டது உண்டு. பலமுறை சிங்காநல்லூர்க்கே டிக்கெட் கேட்டிருந்தாலும் சோழிங்கநல்லூர்க்கு சரியா டிக்கெட் வந்துடும் ;) காரணம் ரெண்டும் நல்லூர்தானே! :)
இப்போ வேறமாதிரியான நிலைமை, போன வெள்ளிக்கிழமை நண்பன் ஒருத்தன் ஃபோண் போட்டு கோயம்புத்தூர்ல ஒரு இடத்துக்கு போக வழி கேக்க, சிங்காநல்லூர்ன்னு சொல்ல வேண்டிவந்த அத்தனை இடத்துலயும் சோழிங்கநல்லூர் சோழிங்கநல்லூர்ன்னே சொல்லி பிறகு ஒவ்வொரு முறையும் திருத்திச்சொன்னேன். ஆனா இன்னமுமே இரண்டு நல்லூர்களும் குழப்பும். ரெண்டு பெயரையுமே மாத்திமாத்தி சொல்லுறதுண்டு, அதுல ஒரு மறவாத்தன்மை இருக்றதா எனக்கு நம்பிக்கை.
ஆனா ட்ரெயினிங் முடிஞ்சப்புறம் சோழிங்கநல்லூர்ல இருந்து அப்டியே தூக்கி செங்கல்பட்ல போட்டுட்டாங்க, கிட்டதட்ட ரெண்டுமாசம் ரெண்டு நல்லூரயும் குழப்பிக்காம இருந்தது தொயரம். திடீர் நல்லசேதியா இப்போ தெரியவந்த விசயம் என்னன்னா அடுத்தமாத இறுதிய்ல மறுபடியும் அப்டியே மொத்தமா எல்லாரும் சோழிங்கநல்லூர்க்கே நகரப்போறம். இனி நல்லூர்களை மறக்காமல், மீண்டும் குழப்பிக்கொள்ள தயாராகனும். :)

No comments:

Post a Comment