20 Jun 2015

யோகா – சேற்றில் முளைத்தது

                          



பொதுவா இங்க எல்லாருக்குமே ‘யோகா’ மேல ஒரு மதிப்பு இருக்கு. ஆனா அது ஒரு மதம் சார்ந்த தனி மனித உடல், உள்ள அடிப்படையிளான சித்தாந்த பழக்க முறை என்றாலும் கூட, மதம் சார்ந்த/சாராத பல மனிதர்கள் பின்பற்றித்தான் வருகிறார்கள். இப்போ நாரதர் மோடியும் அவரு கவர்ன்மென்ட்-ம் இத வச்சு பன்னுற கலகங்களை வெளிக்கொனறவே இந்த பதிவு.




பொதுவில் பல மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/காவி சாராத தத்துவாந்தங்கள் மீதும், மனிதர்கள் மீதும் காவி பூசுவதையும், காவி சார்ந்த விசயங்களை, இவை மனித குளத்திற்கு இன்றியமையாதது, மதம் சாராதது என்று திணிப்பதுமே இவர்களின் சீக்கு வந்த மூளை. திருவள்ளுவரையும், புத்தரையும் ஏன், அம்பேத்கர் மேலையுமே காவி சானி அடிக்க முயற்சி செய்தவர்கள் இவர்கள், இப்போது யோகாவின் மீது கும்புடு போட்டு ஒரு நாள் கூத்து பன்ன போகிறார்கள்.

தினமும் யோகா ப்ராக்டிஸ் பன்னுற மற்றும் சொல்லித்தர மதம் சாராத பல வெகுசன மக்கள் இருக்குறப்போ, யோகா வியாபாரம் பன்னி காசு பார்க்கிறவர்கள் யார் “ஸ்ரீ ஸ்ரீ, சத்குரு, யோகா குரு” இந்த பாதி பெயர்களே போதும் இன்று யோகா யார் கைகளில் இருக்கிறதென்பதற்கு.

“International Day of Yoga” இந்த கூத்துக்கு தேதி தேர்வு பன்னினதுல ஆரம்பிக்குது இவங்க திருவிளையாடல், “JUNE-21”. இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பு இருக்கும் நாட்களில் ஒன்று. இதுல இவங்க சொல்லுர விளக்கம், 177 நாடுகள் யோகா டே-க்கு ஒத்துழைக்குறாங்களாம், அதுல 47 இஸ்லாமிய நாடுகளாம். 177 நாடுகள் ஏத்துக்குறது எல்லாம் அவங்க யோகா க்கும், யோகா பயிற்சி செய்றவங்க உணர்வுக்கும், கொடுக்குற மதிப்பு. ஆனா நம்ம நாட்டு கவர்ன்மென்ட் பன்றது காமெடி மாதிரி தான் இருக்கு, நிறைய அரசு பணியாளர்களை யோகா பன்ன வச்சு ‘கின்னஸ்’ ரெக்கார்டு பன்ன போறாங்களாம். டெல்லி & மும்பை-ல டெய்லி ட்ரெயின்-ல போறவங்கள கணக்கு காட்டினாலே கின்னஸ் கிடைக்கும், இன்னும் பல கின்னஸ் கொட்டி கிடக்கு நம்ம நாட்டுல. ‘சூர்ய நமோஸ்கார்’அ யோகா கூட லிங்க் பன்ன ட்ரை பன்னது ரெண்டாவது காமெடி. யோகா ஸ்லோகன்களுக்கு பதிலா அல்லா பெயரை சொல்லலாம்-னு சொன்னது மூனாவது காமெடி.

எதாவது ஒன்னுக்கு இந்த அரசுகள் தனியா ஒரு நாள் ஒதுக்கலைனா தூக்கம் வராது போல, “Environmental day”-க்கு “Happy Environmental day” னு சொல்லி செடிய நட்டு அடுத்த நாட்கள்ல மறக்குறது போல தான் இதுவும். மதத்துக்கு எப்படி தனி ஒரு நாள் தேவை இல்லையோ அது போல யோகா வுக்கும் தேவை இல்லை. பிடித்தவர்கள் தொடர்வார்கள், இப்படி ஒரு நாள் கூத்து பன்னுறதால புதியதாக யாரும் அனுதினமும் யோகா செய்ய போவது இல்லை. பிடிகாதவர்கள் அடுத்தவர்களை டிஸ்டர்ப் செய்ய போவதும் இல்லை. மாறாக மதம் சாராமல் யோகா பயிற்சி செய்றவங்களுக்கும்/செய்யாதவர்களுக்கும் ஒரு விதமான பயத்தையும் வெறுப்பையும் தான் கொடுக்க போகிறீர்கள்.

No comments:

Post a Comment