29 Apr 2016

சனியாகும் வெள்ளி



இந்த வெள்ளிக்கிழமை இருக்கே, சனியன்!!.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நைட்டே ட்ரெஸ்சயெல்லாம் ஊரவச்சு, துவச்சி போட்டுட்டா சனி, ஞாயிறு ரெண்டுநாளும் நிம்மதியா நெனச்சத பண்ணலாம்னு யோசிச்சு ட்ரெஸ்ச ஊர வைக்கிறது உண்டு. ஆனா அன்னைக்கு மட்டும் நியாபகமறதி உச்சத்துக்கு போயிடும். அதும் எப்டினா சனிக்கிழமை நைட்டுதான் ட்ரெஸ்ச ஊர வச்சதே நியாபகத்துக்கு வரும்.

அட அப்போவாவது துவைச்சி முடிச்சு ஞாயித்துக்கிழமையாவது நிம்மதியா இருக்கலாம்னு நெனைச்சா... அங்கதான் இன்னும் அடி விழும், பின்ன 24 மணிநேரம் நல்லா தண்ணில ஊரிப்போன ட்ரெஸ்ச துவைச்சு காயவச்சு எடுத்தா மணக்கவா செய்யும். அழுக்கா இருக்றப்போ வர்ற ஸ்மெல்லவிட பலமடங்கு அதிகமா நமத்துப்போன ஸ்மெல் வரும். அப்புறம் வேற என்ன, மருக்கா ஒரு டைம் ஞாயுத்துக்கிழமையும் கவனமா அலசி போடனும், அப்பவும் அந்த ஸ்மெல் முழுசா போக ரெண்டு தடவைக்குமேல துவைக்கனும்.

படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்ததவிட, இப்போ அந்த மறதி குறஞ்சிடுச்சி. ஆனாலுமே சென்னை வந்தப்புறம் ஒரு மூனுமுறை இப்டி மறந்து, அந்த வீக்கென்டல நல்லா வாங்கிகட்டிகிட்டாச்சு. இன்னைக்கு இந்த வெள்ளி, சனியனாக மாறாதுன்ற நம்பிக்கைல ட்ரெஸ்சயெல்லாம் ஊரவைக்கப்போறேன், பார்க்கலாம்!

No comments:

Post a Comment