4 Apr 2016

எ.டி.எம் திருவிளையாடல்




எ.டி.எம்'ல பணம் எடுக்குறப்போ 400, 900, 1900 இப்படி எடுத்துதான் எனக்கு பழக்கம். ஏன்னா 500, 1000, 2000 இப்படி எடுத்தா நூரு ரூபாய் நோட்டு வர்றதே இல்ல, நிறைய எ.டி.எம்'ல டினாமினேசன் மிக்ஸ் ஆகி வந்தாலும், எனக்குன்னு எடுக்க போனா மட்டும் வரவே வராது, டிசைன் அப்புடி. அதனாலதான் எப்பவுமே ஒரு நூரு ரூபா நோட்டாவது வர்றமாறி டினாமிநேசன்ல எடுப்பேன். பொதுவா பணம் எடுக்குறப்போ பல எ.டி.எம்'ல "டு யூ வாண்ட் ரெசிப்ட்" அப்படின்னு கேக்கும், அதுக்கு கீழ "எஸ்" & "நோ" இந்த ரெண்டு பட்டனும் இருக்கும், என்னோட பேங்க் எ.டி.எம்'ல கூடவெ ஒரு வசனமும் இருக்கும் அதாவது "ப்ரெஸ் நோ டு சேவ் ட்ரீஸ்" அதாவது ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதால நெறைய மரம் அழியுதாம், சரி அதுதான் பணம் எடுத்த உடனேயே பேலன்ஸ் எவ்ளோ இருக்குனு டக்குனு ஃபோனுக்கு மெசேஜ் வந்துடுமே அப்புறம் எதுக்கு மரத்த வெட்டனும்னு நா எப்பவும் ரெசிப்ட் பிரிண்ட் பண்ணுறதில்ல.

போன டைம் எ.டி.எம் போனப்பவும் இதேபோலத்தான் 900 ரூபா எடுத்தேன், மொத்தமா சேவிங்ஸ்ல இருந்த அமவுண்ட் மூவாயிரத்திசில்லரை ரூவா, 900 எடுத்தது போக 2100 ரூபாய் கிட்ட இருக்கணும், ஆனா ரெசிப்ட்ல 2000 எடுத்தது போக மிச்சம் ஆயிரத்திசில்லரை ரூபாய்தான் இருந்தது. 900 தானே எடுத்தோம், எப்படி 2000 ரூபா டெபிட் ஆச்சுன்னு ஒரே யோசனை, செம்ம டென்சனும்கூட, வாட்ச்மேன்ட கேட்கலாம்னா அந்த எ.டி.எம்'க்கு வாட்ச்மேன்னும் இல்ல, பயங்கர குழப்பத்தோட வீட்டுக்கு வந்து ஃபோன எடுத்து பார்த்தா கரெக்டா 900 தான் டெபிட் ஆகிருக்கு, மிச்சம் 2100ம் கரெக்டா இருந்தது.

அப்புறம்தான் நியாபகம் வந்தது, நாமதான் ரேசிப்டே பிரிண்ட் பண்ணலையேன்னு. யாரோ ஒருத்தவங்க பிரிண்ட் பண்ணின ரெசிப்ட் அது, அந்த லூசு அத எடுக்காம போயிட்டான்/ள், இந்த லூசு ரெசிப்ட் பிரிண்டே பண்ணாம மெஷின்ல இருந்த ரெசிப்ட எடுத்து கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். எல்லாத்தையும் விட கொடுமை என்னன்னா ரெண்டு பேருக்கும் சேவிங்ஸ்ல கிட்டத்தட்ட ஒரே அமவுண்ட் இருந்தது பாருங்க அதுக்கு பேருதான் 'திருவிளையாடல்'.

No comments:

Post a Comment