24 Sept 2016

கேரளாவும் பிலிப்பைன்சும்


Modified Two-Whealers பத்தி ஆர்வமா தேடிக்கிட்டிருக்கிறப்போ, பஜாஜ் M80க்கே டியூக் என்ஜின ஃபிக்ஸ் பண்ணி அசால்ட்டு பண்ணுன கேரள பைக்ஸ் போட்டோஸ் கூகுள்ல வராம இருக்குமா!?. வண்டியவெல்லாம் தாறுமாறா ஆல்டர் பண்ணுறது அவனுங்கதான். ஆடெர்னா எதோ புல்லெட் ஒன்னுல ஹேண்டில் பாரும் பில்லியன் சீட்டும் ஆல்டர் பண்ணி ஓட்டுறதோ, இல்ல RX100க்கு கலர் பெயிண்ட் மாத்தி ஓட்டுறதோ இல்ல. ஸ்ப்லெண்டரையே ஸ்க்ரேம்புலறா மாத்துறது.

என்ன பொறுத்தவரைக்கும், வீட்டுல எப்பவுமே இருக்குற ஒரு வண்டியவே பக்காவா மெயின்டெய்ன் பண்ணி, சில ஆல்ட்ரேசன்சோட ஒட்டுறதுதான் கெத்து. அதுக்கு நம்ம சென்னை ஒன்னும் கொறஞ்சது இல்லனாலும், இங்கயெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டுனா மினிமம் நூறு ரூபா இருந்தாலே போதும் தப்பிக்க. ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும் கேரளாவ்ல அப்டி இல்ல, ரூல்ஸ் எல்லாம் ரொம்போ ஸ்ட்ரிக்டு. ஆனாலும் பைக் கிறுக்கனுங்க பூராவும் ஏதாவது ஆல்ட்ரேசன் பண்ணிதான் ஓட்டுறானுங்க. இப்போல்லாம் கேரளால வர்ற பாதி படங்களோட போஸ்ட்டர்ஸ்லகூட டூ-வீலரோட ஹீரோ வர்றமாதிரி போட்டுத்தான் ப்ரோமோட்டே பண்ணுறாங்கனு ஒரு ஆர்டிகல் கூட பாத்தேன். அந்த அளவுக்கு பைக் கிரேஸ் அங்க!

அங்கெல்லாம் எல்லாருமே வெளி உலகத்துக்கு நல்லாவே எக்ஸ்போஸ்டா இருக்காங்க. அங்க பைக் க்ரேஸ்ன்றதைவிட, படிச்சவன்லாம் அதிகமா சொந்த ஊர்லயே ஏதாவது வேலையோ தொழிலோ பண்ணுறான்றத சொல்லலாம். ஏன்னா இங்கயெல்லாம் சிட்டிக்குள்ளதான் அதிகமா பைக் கிறுக்கனுங்கள பாக்க முடியும், அங்கெல்லாம் கிராமத்துக்கு கிராமம், தெருவுக்கு தெருவு இருக்கானுங்க. எப்போவுமே சிட்டில இருக்கிற கெடுபுடி கிராமத்துல இருக்காதுன்றதால தைரியமா தன் பைக்க ஆல்டர் பண்ணிகிட்டு சுத்துறாங்க! 

இங்க சம்பந்தமே இல்லாம, மொதல் வரிய்ல பிலிப்பைன்ஸ ஏன் இணைச்சேன்னு யோசிக்கிறீங்களா? இந்தியாவுக்கு ஒரு கேரளான்னா, ஆசியாவுக்கு ஒரு பிலிப்பைன்ஸ்!!. ரெண்டாவது, மூணாவது பேரா அப்டியே பிலிப்பைன்ஸுக்கும் பொருந்தும். காஸ்ட்லீ பைக் ஒன்னு வாங்கி ஒட்டுறவன் விட, மைலேஜ் வண்டி ஒன்ன தனக்கு புடிச்சமாதிரி டிசைன் பண்ணி ஒட்டுறவன்தான் அங்க அதிகம் போல, அதுல ஸ்கூட்டரும், 3-வீலரும்கூட அடங்கும். கொஞ்ச மாசம் முன்னால பஜாஜ் பாக்ஸர் ஒன்ன, அவங்க ஊர்ல ஒருத்தன் ஆல்டர் பண்ணியிருந்த விதத்த பாத்தப்போ அப்டியே கண்ணுல ஒத்திக்கலாம்போல இருந்துச்சு, அவ்ளோ ரசனை தெரிஞ்சது அதுல.

இந்தமாதிரியான விசயங்கள்தான், கொஞ்சம் கொஞ்சமா அந்த ஊர்களின் மேல் காதலை நிரப்புது. 

No comments:

Post a Comment