21 Jul 2017

நண்பேன்


பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம், நீ வாங்கின மார்க்குக்கு கூடவெல்லாம் வந்து காலேஜ்ல சீட்டு கேக்க முடியாது நீங்களே எதாவது ஒரு காலேஜ்ல போயி ஃபார்மெல்லாம் வாங்கி போட்டுகோங்க, சீட்டு கெடச்சுதுன்னா வந்து சொல்லுங்க ஃபீசு பணம் மட்டும் கொடுக்குறோம் என்று வீட்டில் சொல்லிருந்தார்கள்.
.
நானும் என் நன்பனொருவனும் திருச்சியில் ஜோசப், ஜமால், பிஷப் அப்புறம் நேஷனல் என்று ஒவ்வொரு காலேஜாக போகலாமென்று முடிவு பண்ணியிருந்தோம். முதலாவதாக நாங்கள் ஃபார்ம் வாங்கச்சென்ற காலெஜ் ஜோசப், மெயின் கேட்டிலிருந்து ஒரு நூறு இருநூறு மீட்டர் தாண்டியதும் நாங்கள் முதலில் பார்த்தது அந்த காலேஜின் டாய்லெட். பார்த்துவிட்டு பக்கத்திலிருந்தவனை பார்த்தால் ஆளை காணவில்லை, வினாடி நேரத்திலேயே அந்த டாய்லெட்டின் வாசல்வரை சென்றிருந்தான்.
.
உள்ளே சென்று ஓரிரண்டு நிமிடம் கடந்து வெளியே வந்தவனிடம் ஏண்டா அவ்ளோ அர்ஜெண்டா? என கேட்கலாமென்றிருந்தேன். ஆனால் அதற்கு முன்னமாக, வந்த மறுகணமே 'அப்பாடா அப்துல் கலாம் ஒன்னுக்கு போன டாய்லெட்ல நானும் ஒன்னுக்கு போயிட்டேண்டா!!' என்றான், ஒருநிமிடம் புல்லரித்துவிட்டது. இன்று அவன் போன்ற நண்பர்கள் அருகில் இல்லாததாலோ என்னவோ வாழ்கை தேமேவென நகர்கிறது. 

No comments:

Post a Comment