13 Jul 2015

கேணியத்தான் அழிக்கிறோம்!

கேணில கல்ல போட்டா, அந்த கல்ல எடுக்குற வரைக்கும் கல்யாணம் நடக்காதுனு ஊர்பக்கம் சொல்லுவாங்க. இது ஒரு மூடநம்பிக்கைனே வச்சுக்குவோம், இத நாம இன்னைக்கு எப்படி உடைக்கிறோம், கிணத்து மேல பத்து கல்ல போட்டு கல்யாணம் பன்னி காட்டி அந்த மூடநம்பிக்கைய உடைக்கிறோம்.
.
என்னதான் சொல்லவரானுங்க ஊர் காரங்க, “டேய், சனியனே! போரவர்றவனெல்லாம் கேணிமேல ஆளுக்கொரு கல்ல போட்டா கேணி கேணியா இருக்காதுடா ஒருநாள் அது மூடிடும்” இதத்தான் சொல்ல வராங்க. இத தெளிவா சொன்னா நம்ம ஆளு கேப்பானா? இல்ல!. கல்யாணம் மேட்டர வச்சு சொன்னதால ஓரளவு கேட்டானுங்க. இன்னைக்கு மூடநம்பிக்கைய அழிக்கிறோம்னு கேணி மேல பத்து கல்ல போட்டு கேணியத்தான் அழிக்கிறோம் மூடநம்பிக்கையை அல்ல.

No comments:

Post a Comment